herzindagi
image

பாம்பு செடி வளர்த்தால் மன அழுத்தம் குறையுமாம்; நன்மைகளை கட்டாயம் தெரிஞ்சுகோங்க

வீட்டில் வளர்க்கப்படும் பல செடிகளில் பாம்பு செடி மிக பிரபலமானது. பாம்பு செடியை வீட்டில் வளர்ப்பது மிகவும் நல்லது என நம்பப்படுகிறது. எண்ணற்ற நன்மைகள் மற்றும் எளிதான பராமரிப்பு முறை காரணமாக பாம்பு செடி வளர்ப்பை பலரும் விரும்புகின்றனர். இதை வளர்ப்பதற்கு தினமும் அதிக நேரம் செலவிட அவசியமில்லை. வீட்டில் பாம்பு செடி வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2025-04-21, 16:26 IST

உலகின் பல்வேறு பகுதிகளில் பாம்புச் செடி வளர்ப்பினை கலாச்சார முக்கியத்துவமாக பார்க்கின்றனர். சீனா கலாச்சாரத்தில் பாம்பு செடி வீட்டிற்கு அதிர்ஷ்டத்தையும் செழிப்பையும் கொண்டு வருவதாக நம்புகின்றனர். ஆப்ரிக்க நாட்டின் பழங்கால கதைகளில் பாம்பு செடி தீய சக்திகளுக்கு எதிரான பாதுகாப்பை தருவதாக கருதினர். பாம்பு செடி குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரும் தன்மை கொண்டது. குறைந்த அளவு தண்ணீருடன் வாழக்கூடியது. இந்த செடியை வளர்க்க பலரும் ஆர்வம் காட்டுவதன் பின்னணியில் பல நன்மைகள் அடங்கி இருக்கின்றன. 

benefits of snake plant

பாம்பு செடி நன்மைகள்

காற்றை சுத்திரிகரிக்கும் பாம்பு செடி 

பாம்புச் செடியின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக காற்றைச் சுத்திகரிக்கும் திறனை குறிப்பிடலாம். தொடர்ச்சியான ஆக்ஸிஜன் வெளியீடு மற்றும் நச்சு உறிஞ்சுதல் மூலம் காற்று சுத்திகரிப்பதில் பாம்பு செடி உதவுகிறது. இரவும் பகலும் ஒளிச்சேர்க்கையைச் செய்யும் அதன் தனித்துவமான திறனால் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது, அதே நேரத்தில் ஃபார்மால்டிஹைட், பென்சீன் மற்றும் சைலீன் போன்ற மாசுபடுத்திகளை நீக்கி சுகாதாரமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் உட்புற சூழலுக்கு பங்களிக்கிறது.

குறைந்த பராமரிப்பு

பாம்பு செடி வளர்ப்புக்கு குறைந்தபட்ச பராமரிப்பே போதுமானது. இது மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் தாக்குப்பிடித்து உயிர்வாழக் கூடியது. குறைந்த வெளிச்சத்திலும் செழித்து வளரும். சரியான தண்ணீர் ஊற்ற தவறினாலும் தாக்குப்பிடித்து வளரும். புதிதாக செடி வளர்க்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு இது மிக சிறந்த தேர்வாக அமைகிறது.

தூக்கத்தின் தரம்

பகலில் மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடும் பெரும்பாலான தாவரங்களைப் போல் இல்லாமல் பாம்புச் செடி இரவில் ஆக்ஸிஜனை வெளியிடுவதற்குப் பெயர் பெற்றது. இந்த தனித்துவமான பண்பு சிறந்த தூக்க தரத்திற்கு பங்களிக்கும் மற்றும் வீட்டில் ஆரோக்கியமான உட்புற சூழலை உருவாக்கும்.

பாம்பு செடியின் இடம்

பானையிலோ அல்லது தொங்கும் கூடையிலோ, வீட்டின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ எங்கு வைக்கப்பட்டாலும் பாம்புச் செடிகள் சூழல்களுக்கு நன்கு பொருந்து வளரும். இதனால் எங்கு வேண்டுமானாலும் விருப்பப்படி வளர்க்கலாம்.பாம்பு செடி அவற்றின் கண் பார்வைக்கு இதமான சூழலை தரக்கூடியது. பணியில் மகிழ்ச்சியான சூழலையும் ஓய்வறையில் அமைதியான சூழலையும் உருவாக்கி தருகிறது. மகிழ்ச்சியான இயல்பு வேலை மற்றும் ஓய்வெடுப்பதற்கு மிகவும் உகந்த சூழ்நிலையை உருவாக்குகிறது.

மேலும் படிங்க  மாடியில் கத்திரிக்காய் விளைச்சல் காண்பதற்கு விதைப்பு முதல் அறுவடை வரை; முழு தகவல்

இயற்கையான ஈரப்பதம்

பாம்பு செடி இயல்பாகவே ஈரப்பதத்தை வெளியிடும். வறண்ட காலநிலையிலோ அல்லது குளிர்கால மாதங்களிலோ வீட்டின் உட்புறம் காற்று வறண்டு இருக்கும் போது பாம்புச் செடி மிகுந்த அளவில் நன்மை பயக்கும். பாம்பு செடி மன அழுத்தத்தைக் குறைப்பதோடு தொடர்புடையது. வீட்டில் பசுமையான சூழல் நம்முடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கும் மனநலனை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com