herzindagi
image

சவலைப் பிள்ளை போல் குழந்தைகள் ஒல்லியா இருக்காங்களா? கொழு கொழுன்னு வர தேங்காய் பால் குடுங்க!

குழந்தைகளுக்கு என்ன தான் அடிக்கடி சாப்பிடுவதற்கு ஏதாவது கொடுத்தாலும் உடல் எடை கொஞ்சம் கூட அதிகரிக்காது. இவற்றைச் சரி செய்ய வேண்டும் என்றால் குழந்தைகளுக்குத் தேங்காய் பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
Editorial
Updated:- 2025-11-26, 23:39 IST


குழந்தைகள் கருவில் இருக்கும் போது அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் அவசியம் தேவை. ஒரு சில தாய்மார்களுக்கு 9 மாத காலங்கள் வரை தொடர்ச்சியாக வாந்தி வரக்கூடும். எவ்வித உணவுகளையும் சாப்பிட முடியாததால் குழந்தைகளின் வளர்ச்சி குறைவாக இருக்கும். கருவில் இருந்து வெளியே வந்த பின்னதாக தொடர்ச்சியாக தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தைகளின் உடல் எடையானது அதிகரிக்கும். ஆனால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இதுபோன்று இருப்பதில்லை. என்ன தான் தாய்ப்பாலுடன் இணை உணவுகள் கொடுத்தாலும் சில குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்காது. சவளைப் பிள்ளை போன்று மிகவும் ஒல்லியாகவே இருப்பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு தேங்காய் பால் கொடுக்கலாம். எவ்வித கெமிக்கல் இல்லாத ஆரோக்கியமான பானத்தின் மூலம் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க முடியும். எப்படி தேங்காய் பால் செய்வது ? எப்படியெல்லாம் உடல் எடையை அதிகரிக்க உதவும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.


குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்கும் தேங்காய் பால்:

  • சவளைப் பிள்ளை போன்ற குழந்தைகளைக் கொழு கொழுன்னு மாற்ற வேண்டும் என்றால் முதலில் அரை மூடி தேங்காயை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஏலக்காய் மற்றும் கருப்பட்டி சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் இதை வடிகட்டி குழந்தைகளுக்குத் தினமும் கொடுக்கலாம். வெறும் 30 நாட்களில் அவர்களின் உடல் எடையானது அதிகரிக்கும். 
  • குழந்தையின் எடை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, சாப்பிடக்கூடிய உணவுகளை எளிதில் ஜீரணிக்க உதவுகிறது.
  • தேங்காய் பாலில் அத்தியாவசிய கொழுப்புகள் உள்ளதால் தேவையில்லாத உடல் நல பிரச்சனைகள் ஏற்படாது.

மேலும் படிக்க: உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த ஆரோக்கியமான உணவுகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்!

 

  • தேங்காய் பாலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் உடலின் ஒட்டு மொத்த வளர்ச்சி அடைவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

மேலும் படிக்க: பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்க

  • தேங்காய் பாலில் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலினியம் மற்றும் துத்தநாகம் உள்ளன, அவை ஆற்றல் உற்பத்தி மற்றும் எண்ணற்ற வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஆதரிக்கின்றன.
  • வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com