நம்மில் பலருக்கும் தினசரி காலையில் எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு காபி அல்லது டீ குடித்தால் தான் நாள் தொடங்கும் என்ற பழக்கம் உள்ளது. ஒரு சில நேரத்தில் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீர் அல்லது பச்சை தண்ணீர் குடித்து வரலாம். அதே போல நம் தினசரி காலையில் எழுந்தவுடன் குடிக்கும் பானம் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்க உதவுகிறது. அந்த வரிசையில் தினசரி காலையில் காபி அல்லது டீ குடிப்பதை தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்க உதவும் மஞ்சள் மற்றும் இஞ்சி தண்ணீரை குடித்து வரலாம். இந்த மஞ்சள் மற்றும் இஞ்சி இயற்கையாகவே ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த தண்ணீரை தினசரி காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
செரிமானம் சீராகும்:
நம் உடலுக்கு தேவையான சிறந்த உணவு செரிமானத்திற்கு நொதிகள் சுரப்பதை ஊக்குவிக்க இந்த மஞ்சள் தண்ணீர் உதவுகிறது. மேலும் வாந்தி, குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளையும் இஞ்சி குணப்படுத்த பெரிதும் உதவுகிறது. அதே போல செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்தி தணிப்பதன் மூலம் நல்ல செரிமான ஆரோக்கியத்தை பெறுவதற்கு மஞ்சள் உதவும். எனவே தினசரி காலையில் இஞ்சி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடித்து வந்தால் செரிமான கோளாறுகள் நாளடைவில் குணமாகும்.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:
இஞ்சி மற்றும் மஞ்சளில் நிறைந்திருக்கும் பண்புகள் நம் உடலை ஆற்றலுடன் பாதுகாக்க உதவுகிறது. இதனால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடும். இதனைத் தொடர்ந்து காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இஞ்சி மஞ்சள் நீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உடலுக்கு ஏற்படும் பல நோய்த் தொற்றுகளை எதிர்த்துப் போராட பெரிதும் உதவுகிறது.
ரத்த ஓட்டம் அதிகரிக்கும்:
மஞ்சள் மற்றும் இஞ்சி ஆகிய இரண்டு பொருட்களிலும் நம் ரத்த ஓட்டத்தை மேம்படுத்த கூடும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தினசரி காலையில் இந்த இஞ்சி மஞ்சள் நீரை சாப்பிட்டு வந்தால் ரத்த நாளங்கள் விரிவுபடுத்த உதவுகிறது. அதேபோல கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் மஞ்சள் பெரிதும் உதவுகிறது.
மேலும் படிக்க: கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உலர் பழங்கள் இதோ
உடல் எடை குறையும்:
உடல் எடை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் கண்டிப்பாக தினசரி காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இந்த மஞ்சள் இஞ்சி தண்ணீரை குடித்து வரலாம். இந்த இஞ்சி மஞ்சள் நீரில் உள்ள குருக்கமின் என்ற கலவை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்கிறது. இதனால் உடலில் அழற்சியை குறைப்பதன் மூலம் எடை இழப்பு முயற்சிக்கு பெரிதும் உதவுகிறது. அதே போல நம் பசியை கட்டுப்படுத்த இஞ்சி பெரிதும் உதவுகிறது. இதனால் தினசரி காலையில் இந்த இஞ்சி மஞ்சள் நீரை குடித்து வந்தால் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation