herzindagi
image

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கணுமா? வெறும் வயிற்றில் துளசி இலைகளைச் சாப்பிட்டுப் பாருங்கள்!

தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 5 அல்லது 6 துளசி இலைகளை மென்று சாப்பிடும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடும்.  
Editorial
Updated:- 2025-09-15, 15:16 IST

பருவ காலங்களில் ஏற்படக்கூடிய வைரஸ், பாக்டீரியா போன்ற நோய் தொற்றுப் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் என்றால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவது ஒருபுறம் இருந்தாலும் அன்றாட வாழ்க்கை முறையில் சில விஷயங்களைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவற்றில் முக்கியமான ஒன்றாக உள்ளது துளசி. இந்திய மருத்துவத்தில் மிகவும் பிரபலமான மூலிகை செடிகளில் ஒன்றாக துளசியைத் தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஏன்? இதனால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க:  Bone health: எலும்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 5 வகை உணவுகள்; அளவுடன் சாப்பிட்டால் ஆபத்து இல்லை!


துளசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  • தினமும் வெறும் வயிற்றில் துளசியை மென்று சாப்பிடும் போது இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள், பைட்டோநியூட்ரியண்ட்ஸ் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
  • காய்ச்சல், தொண்டைப்புண் பாதிப்பு உள்ளவர்கள் துளசியைத் தண்ணீரில் கொதிக்க வைத்துப் பருகும் போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலைப் பாதுகாக்கிறது.
  • உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு துளசியைத் தொடர்ச்சியாக சாப்பிடும் போது, வாய் துர்நாற்றம் நீங்குவதோடு, கண்பார்வை பிரச்சனை உள்ளவர்களுக்கும் தீர்வாக அமைகிறது.

மேலும் படிக்க:  சட்டென்று மாறும் வானிலை; பருவகால பாதிப்பிலிந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியது!


துளசியை உட்கொள்ளும் முறை:

  • தினமும் துளசி இலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். ஆனால் பச்சையாக சாப்பிடுவதை பலர் விரும்பமாட்டார்கள். அதற்கு மாற்றாக 5 அல்லது 6 துளசி இலைகளைத் தண்ணீர் கொதிக்க வைத்துக் கொள்ளவும். வடிகட்டிய பின்னதாக அதனுடன் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்துக் குடிக்கலாம். துளசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
  • அடுத்ததாக துளசி இலைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். பின்னர் காலையில் வெறும் வயிற்றில் அதைக் குடித்து வரும் போது உடல் புத்துணர்ச்சியடைகிறது.

  • அனைத்து பருவகாலங்களிலும் துளசி இலைகள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் துளசி இலைகளை நிழற்காய்ச்சலிட்டு காய வைத்து எடுத்துக் கொள்ளவும். நன்கு காய்ந்தவுடன் மிக்ஸியில் அரைத்து தூளாக்கிக் கொள்ளவும். ஒரு டப்பாவில் சேமித்து வைத்துத் தேவைப்படும் போது சூடான தண்ணீரில் கரைத்துக் குடிக்கவும். இவ்வாறு தொடர்ச்சியாக உணவுமுறையில் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்ளும் போது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதுபோன்ற ஆரோக்கியம் தொடர்பான கட்டுரைகளைப் பெற Herzindagi வுடன் இணைந்திருந்திருங்கள்.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com