தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக தேங்காய் பால் சிறந்தது என அமெரிக்காவின் புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணரான டாக்டர் ஜோஷ் ஆக்ஸ் அவர்கள் நிரூபித்துள்ளார். தேங்காயை அரைத்து அதிலிருந்து பிரிக்கப்படும் பாலில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளன. இதில் நிறைந்துள்ள துத்தநாகம், லாரிக் அமிலம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன.
தேங்காய் பால் உணவைத் தவிர்த்து சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கும் பயன்படுத்தப்படுகிறது. ஃப்ரெஷ்ஷாக எடுக்கப்பட்ட தேங்காய் பாலை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர உடலில் பல அதிசய மாற்றங்களை காணலாம். தேங்காய் பாலின் நன்மைகளை இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்…
இந்த பதிவும் உதவலாம்: நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளால் உடலுக்கு இவ்வளவு நன்மைகளா!
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில் நம்முடைய இதயத்தை பாதுகாக்க கூடிய உணவுகளில் தேங்காய் பாலும் ஒன்று. இதில் உள்ள லாரிக் அமிலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவுகளை குறைக்க உதவுகிறது. மேலும் நல்ல கொழுப்புகளை அதிகரிப்பதன் மூலம் உடலுக்கு பல நல்ல விளைவுகளையும் ஏற்படுத்துகிறது.
உடல் எடையை குறைக்க உதவும்
தேங்காய் பால் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதன் மூலம் அதிகப்படியான உணவு உட்கொள்ளை கட்டுப்படுத்துகிறது. இதை உங்களுடைய உணவில் சேர்த்து வர உங்களுடைய தினசரி கலோரி உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு தேங்காய் பால் சிறந்த பலன்களை கொடுக்கும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்
தேங்காய் பாலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள், உடலில் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகின்றன. இது இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
வாய் மற்றும் வயிற்று புண்களை குணப்படுத்தும்
தேங்காய் பாலை வெறும் வயிற்றில் குடித்து வர வாய் மற்றும் வயிற்றுப் புண்களை குணப்படுத்தலாம். இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி அல்சர் பண்புகள் புண்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட உதவுகின்றன.
நினைவாற்றலை மேம்படுத்தும்
தேங்காய் பாலில் உள்ள பண்புகள் மூளைக்கு தேவையான ஆற்றலை கொடுக்கிறது. இது நினைவாற்றலை மேம்படுத்த உதவும்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தேங்காய் பாலில் உள்ள ஆன்டி செப்டிக் பண்புகள் உடலில் ஏற்படும் நோய் தொற்றுகளை எதிர்த்து போராட உதவுகின்றன. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளின் தொற்றுகளிலிருந்து உடலை பாதுகாத்துக் கொள்ளவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும் தேங்காய் பாலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.
இரத்த சோகையை தடுக்கும்
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான சில பிரச்சனைகளில் இரத்த சோகையும் ஒன்று. தேங்காய் பாலில் நிறைந்துள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. இதைத்தொடர்ந்து உணவில் சேர்த்து வர இரத்த சோகையையும் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: இந்த 5 விஷயங்களை செய்தால் போதும், ஒரே வாரத்தில் ஒல்லியாகலாம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation