நம்மில் பலருக்கும் தினசரி காலை எழுந்தவுடன் டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் நிச்சயம் இருக்கும். இந்த நிலையில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த டீ அருந்துவது மிகவும் அவசியம். இந்த வரிசையில் நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற ஆவாரம்பூ பெரிதும் உதவுகிறது. குறிப்பாக பெண்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆவாரம் பூ உதவும். இந்த ஆவாரம் பூவை சுடு தண்ணீரில் கொதிக்க வைத்து தினமும் ஒரு கிளாஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். அதே போல பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் பிரச்சனை கூட இந்த ஆவாரம்பூ டீ குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும். தினசரி காலையில் ஆவாரம் பூ டீ குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஆவாரம் பூ டீ செய்வது எப்படி?
முதலில் ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இப்போது தண்ணீர் கொதி நிலைக்கு வரும் போது ஆவாரம் பூக்களை சேர்த்து கொதிக்க விடுங்கள். பிறகு இதை வடிகட்டி அப்படியே பருகலாம். இது சற்று துவர்ப்பான சுவையில் இருக்கும். அதனால் தேவைப்பட்டால் சிறிது தேன் கலந்து குடித்து வரலாம். குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சேர்க்காமல் இந்த ஆவாரம் பூ டீயை அப்படியே குடிக்க வேண்டும். ஒருவேளை இந்த ஆவாரம்பூ பொடியாக கிடைத்தாலும் அதை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி தினசரி காலையில் குடித்து வரலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது:
ஆவாரம் பூ நாட்டு வைத்தியங்களுக்கு அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகளும், நீரிழிவு நோயாளிகளும் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க இந்த ஆவாரம் பூ டீ பெரிதும் உதவுகிறது. அது மட்டுமல்லாமல் நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் இந்த ஆவாரம் பூ டீ ஒரு சிறந்த மருந்து.
உடல் சூடு தணியும்:
இந்த ஆவாரம் பூக்களை நன்கு வெயிலில் காயவைத்து இதனை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் உடல் சூடு, பித்தம், மாதவிடாயின் போது பெண்களுக்கு ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பிரச்சனைகள் குணமாகும் என்று கூறப்படுகிறது. அதே போல குடல் புண் போன்ற பிரச்சினைகள் கூட இந்த ஆவாரம் பூ டீ குடித்து வந்தால் குணமாகும்.
கண்களுக்கு குளிர்ச்சி தரும்:
கண் தொடர்பான அனைத்து நோய்களை குணமாக்கவும் இந்த ஆவாரம் பூ டீ பெரிதும் உதவுகிறது. முக்கியமாக கண் சிவந்து போதல் பிரச்சனை குணமாகும். இந்த ஆவாரம் பூக்களை கண்களின் மீது கட்டி வைத்து சிறிது நேரம் கழித்து கழுவி விடுங்கள். இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. அதே போல கண் வீக்கம் குறையவும் கண்களில் உள்ள கட்டிகள் நீங்கவும் இந்த ஆவாரம் பூ பயன்படுத்தப்படுகிறது.
மேலும் படிக்க: கோடை காலத்தில் கரும்பு ஜூஸ் குடித்தால் கிடைக்கும் நன்மைகள்!
சருமத்திற்கு பொலிவு தரும்:
இந்த ஆவாரம் பூ டீ குடித்து வந்தால் நம் சருமத்திற்கு இயற்கை முறையில் பொலிவு கிடைக்கும். ஆவாரம் பூக்களை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதால் கடும் காய்ச்சலும் விலகி விடும் என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றது. அதே போல நம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்குவதற்கும் இந்த ஆவாரம் பூ டீ ஒரு சிறந்த மருந்தாகும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation