ரூ 1.25 தேங்காய் பன் வாங்க முடியாமல் கஷ்டப்பட்டேன் - நடிகர் சூரி உருக்கம்

திருப்பூர் மாநகரம் தனக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுத்த போதி மரம் என்றும் மிகவும் கஷ்டப்பட்டு பயணத்தை தொடங்கிய ஊரில் தனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்பது நெகிழ்ச்சி அளிப்பதாகவும் நடிகர் சூரி கண்கலங்க பேசியுள்ளார்.
image

திரையுலகில் சின்ன சின்ன வேலைகளை செய்து கிடைத்த சிறிய ரோல்களில் நடித்து நகைச்சுவை கலைஞனில் இருந்து ஹீரோவாக உருவெடுத்தவர் சூரி. விடுதலை, கருடன், விடுதலை 2 என வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது மாமன், மண்டாடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். வரும் 16ஆம் தேதி மாமன் திரைப்படம் வெளியாகும் நிலையில் படத்தின் ப்ரோமோஷனுக்காக திருப்பூரில் சென்றிருந்தார். அங்கு நடிகர் சூரி கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

வாழ்க்கை கற்றுக் கொடுத்த திருப்பூர் - சூரி

1993ல் திருப்பூருக்கு வந்தேன். 8ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு எல்லாத்தையும் விட்டு திருப்பூருக்கு நண்பர்களுடன் வேலை தேடி வந்தேன். பல்லடம் சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்தேன். அங்கு எனக்கு ஒரு நாள் கூலி 20 ரூபாய். 7 நாட்கள் வேலை செய்தால் 140 ரூபாய் கிடைக்கும். 70 ரூபாய் செலவு செய்துவிட்டு 70 ரூபாயை ஊருக்கு அனுப்புவேன். எனது முதல் வேலையை தொடங்கியது திருப்பூரில் தான். வாழ்க்கைய கற்றுக்கொடுத்த போதிமரமாக திருப்பூரை கருதுகிறேன். ஒரு ஊரில் எல்லா பாஷையும் கற்றுக்கொள்ளலாம் என்றால் அது திருப்பூர் மட்டுமே. தனது முதலாளிகள் நன்றாக கவனித்து கொண்டதை நன்றி மறவாமல் குறிப்பிட்ட சூரி பல கஷ்டங்களை பார்த்து வளர்ந்த எனக்கு அதே திருப்பூரில் தற்போது சிவப்பு கம்பளத்தில் விசில் அடித்து கைதட்டி வரவேற்பது நெகிழ்ச்சியை தருவதாக கையெடுத்து கும்பிட்டு கண்கலங்கியவாறு சூரி பேசினார்.

ரூ 1.25 தேங்காய் பன் வாங்க சிரமம் - சூரி

நான் வேலை செய்த கடையின் அருகே ஒரு பேக்கரி இருக்கும். வேலையில் கிடைக்கும் காசை அங்கே பிடிங்கிவிடுவார்கள். ஒன்னே கால் ரூபாய்க்கு கிடைக்கும் தேங்காய் பன் அவ்வளவு சுவையாக இருக்கும். டீ குடித்துவிட்டு அங்கிருந்து செல்லும் போது தேங்காய் பன் கண்ணில் தென்படும். 4 ரூபாய் செலவு செய்தால் வீட்டிற்கு காசு அனுப்ப முடியாது என நகர்ந்து செல்ல முயல்வேன். எனினும் தேங்காய் பன் வாடை விடாது. என்னுடைய நண்பன் தேங்காய் பன் சாப்பிட்ட படியே என்னுடன் வருவான். கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் கடைக்கு சென்று இரண்டு தேங்காய் பன் சாப்பிட்ட பிறகே வேலைக்கு திரும்புவேன். அப்படி கஷ்டப்பட்ட எனக்கு அதே ஊரில் இவ்வளவு வரவேற்பு கிடைப்பதை பார்ப்பது மகிழ்ச்சி என சூரி தெரிவித்தார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP