நாம் நம் முகத்தைப் பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால் நம் உடலின் மற்ற பாகங்களுக்கு அதே அளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆகையால் இவை பொலிவிழந்து கருமை அடைய தொடங்குகின்றன. குறிப்பாக மெலனின் அதிகரிப்பினால் முழங்கால்கள், முழங்கைகள் மற்றும் அக்குள்கள் கருமையாகிவிடுகின்றன.
முழங்கால்கள் கருமையாக இருப்பதால், நம்மில் பெரும்பாலானோர் பல சிரமங்களையும், அவமானங்களையும் சந்தித்திருப்போம். இந்த காரணத்திற்காகக் குட்டையான ஆடைகள் அணிவதையம் தவிர்த்திருப்போம். ஆனால் இந்த பிரச்சனையை சுலபமாக சரி செய்யலாம். முழங்கால் கருமை நீக்க, இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது போல் தயிரை பயன்படுத்துங்கள்.
தயிர் மற்றும் கற்றாழை ஜெல் பேக்
தேவையான பொருட்கள்
- தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
- கற்றாழை ஜெல் - 1 டேபிள் ஸ்பூன்
என்ன செய்ய வேண்டும்?
- முதலில் ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- இப்போது இந்த பேஸ்ட்டை முழங்கால்களில் தடவி சுமார் 20-25 நிமிடங்கள்வரை உலர விடவும்.
- இது உலர்ந்ததும், முழங்கால்களை தண்ணீரில் கழுவவும்.
- தினமும் இந்த பேஸ்ட்டை முழங்கால்களில் தடவி வந்தால், சில நாட்களில் நல்ல பலன் தெரியும்.
தயிர் மற்றும் தேன் பேக்
தேவையான பொருட்கள்
- தயிர்- 1 டேபிள் ஸ்பூன்
- தேன்- 1 டீஸ்பூன்
என்ன செய்ய வேண்டும்?
- முதலில், இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பின்னர் இந்த கலவையை முழங்கால்களில் தடவி 25-30 நிமிடங்கள் வரை உலர விடவும்.
- உலர்ந்த பின் தண்ணீரில் கழுவவும்.
தயிர் பயன்படுத்துவதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள்
தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. மேலும் நமது முகத்திலிருக்கும் சுருக்கங்கள் மற்றும் வயதான தோற்றத்தைக் குறைக்க உதவுகிறது. அதோடு, லாக்டிக் அமிலம் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது. கற்றாழை ஜெல் சருமத்தில் உள்ள கருமையைக் குறைத்து பளபளப்பாக மாற்ற உதவுகிறது.தேன் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி ஈரப்பதத்தை பராமரிக்க உதவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- குளிர்காலத்தில், இந்த பேக்கை காலையிலோ அல்லது இரவிலோ பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் தயிர் குளிர்ச்சியானது என்பதால், சளி மற்றும் இருமல் வர வாய்ப்புள்ளது. எனவே பிற்பகல் நேரத்தில் இதைப் பயன்படுத்துங்கள்.
- உங்களுக்கு தயிர் ஒவ்வாமை இருந்தால், இந்த பேக் பயன்படுத்த வேண்டாம்.
இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
- UV கதிர்களால் நமது சருமம் கருப்பு நிறமாக மாறத் தொடங்குகிறது. தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
- சில சமயங்களில் நீரேற்றம் இல்லாததால், சருமம் கருப்பு நிறமாக மாறுகிறது. எனவே நாம் எப்போதும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- குளிர்காலத்தில், இந்த பேக்கை காலையிலோ அல்லது இரவிலோ பயன்படுத்த வேண்டாம், ஏனெனில் தயிர் குளிர்ச்சியானது என்பதால், சளி மற்றும் இருமல் வர வாய்ப்புள்ளது. எனவே பிற்பகல் நேரத்தில் இதைப் பயன்படுத்துங்கள்.
- உங்களுக்கு தயிர் ஒவ்வாமை இருந்தால், இந்த பேக் பயன்படுத்த வேண்டாம்.
இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
- UV கதிர்களால் நமது சருமம் கருப்பு நிறமாக மாறத் தொடங்குகிறது. தீங்கு விளைவிக்கும் UV கதிர்களிலிருந்து நம் சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டியது அவசியம்.
- சில சமயங்களில் நீரேற்றம் இல்லாததால், சருமம் கருப்பு நிறமாக மாறுகிறது. எனவே நாம் எப்போதும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation