herzindagi
image

Gandhi jayanti: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களின் பேச்சுப் போட்டிக்கான எளிய குறிப்புகள்

Gandhi jayanti: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உரையாற்றுவதற்கு, மாணவர்களுக்கான எளிய குறிப்புகளை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவை பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
Editorial
Updated:- 2025-10-01, 13:34 IST

Gandhi jayanti: அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. காந்தி ஜெயந்தி என்பது ஒரு தேசிய விடுமுறை மட்டுமல்ல, அவரது உண்மை, அகிம்சை, தேசபக்தி மற்றும் தியாகம் ஆகிய கொள்கைகள் உள்ளிட்ட போதனைகளை சிந்திக்கும் நாளாகவும் இது அமைகிறது.

மேலும் படிக்க: விஜயதசமி நாளில் ஏன் குழந்தைகளைப் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் தெரியுமா?

 

இந்த நாளை நினைவுகூரும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் சிறப்பு நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மரியாதை செலுத்துகின்றன. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உரைகள் இடம்பெறுகின்றன. காந்தியின் பங்களிப்பையும், ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக, செழிப்பான ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற நாட்டிற்கு வழிவகுத்த அவரது ஒத்துழையாமை இயக்கத்தையும் அவர்கள் நினைவுகூர்கிறார்கள்.

Gandhi Jayanthi

 

உங்கள் பள்ளி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் நடைபெறும் காந்தி ஜெயந்தி நிகழ்ச்சிக்கு முன்னதாக, காந்தியின் வாழ்க்கை மற்றும் விழுமியங்கள் குறித்து நீங்கள் ஒரு உரைக்கு தயாராகி இருந்தால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய சில கருத்துகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தற்போது பார்க்கலாம்.

மேலும் படிக்க: Onam wishes in tamil: ஓணம் பண்டிகை 2025 - உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பகிர்வதற்காக தமிழில் வாழ்த்துகள்

 

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு உரை:

 

மதிப்புக்குரிய தலைமை ஆசிரியர் அவர்களே, மரியாதைக்குரிய ஆசிரியர்களே மற்றும் அருமை நண்பர்களே, அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

 

இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசத்தின் தந்தையான மோகன்தாஸ் கரம்சந்த் காந்திக்கு மரியாதை செலுத்த நாம் இங்கு கூடி இருக்கிறோம். அக்டோபர் 2, 1869 அன்று பிறந்த காந்தி, சுதந்திரமான இந்தியாவை கற்பனை செய்த ஒரு குறிப்பிடத்தக்க மனிதர். 200 ஆண்டுகள் காலனித்துவ ஆட்சியில் இருந்த இந்தியாவிலிருந்து, ஒடுக்குமுறை செய்யும் ஆங்கிலேய படைகளை அகற்ற அகிம்சை என்ற சக்திவாய்ந்த கருவியை பயன்படுத்தினார்.

Gandhi

 

காந்தி ஜெயந்தி என்பது அகிம்சை, உண்மை மற்றும் தியாகத்தை அடிப்படையாக கொண்ட ஒரு மனிதனின் விழுமியங்கள் மற்றும் ஊக்கமளிக்கும் வாழ்க்கை குறித்து சிந்திக்கும் நாள். அவர் தன் பயணத்தின் மூலம் மனிதநேயம், அமைதி, நீதி மற்றும் உண்மைக்கான அசைக்க முடியாத தேடலை ஊக்குவித்தார். இந்தியாவின் சுதந்திரத்தை பாதுகாக்க காந்தி மேற்கொண்ட தியாகங்கள் மற்றும் துன்பங்களை நாம் நினைவில் கொள்வோம். நீதி, சமத்துவம் மற்றும் அகிம்சை மேலோங்கும் ஒரு சமூகத்தை உருவாக்க, காந்தி போற்றிய கொள்கைகளை நாம் நிலைநிறுத்துவோம் என்று சபதம் ஏற்போம். அனைவருக்கும் இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துகள்.

 

இது போன்ற கருத்துகளை உங்களுடைய காந்தி ஜெயந்தி உரையில் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com