மகாவதார் நரசிம்மா விமர்சனம் : ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் தரத்தில் இந்திய அனிமேஷன் படம்

கே.ஜி.எஃப் படத்தை தயாரித்த நிறுவனத்தின் பிரமாண்ட படைப்பு மகாவதார் நரசிம்மா. புராணக் கதைகளை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
image

அஷ்வின் குமார் இயக்கத்தில் வெளிவந்துள்ள அனிமேஷன் ஆன்மிக படம் மகாவதார் நரசிம்மா. சில மாதங்களுக்கு முன்பு கே.ஜி.எஃப் தயாரிப்பு நிறுவனம் மகாவதார் யுனிவர்ஸ் என்ற தலைப்பில் ஏழு படங்களின் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி தற்போது மகாவதார் நரசிம்மா ஜூலை 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிறிய வயதில் பாட்டி புராணக் கதைகள் சொல்லி கேட்டிருப்போம் அல்லது சில தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். அவற்றை கிராஃபிக்ஸ் பயன்படுத்தி திரை வடிவிற்கு மாற்றி படமாக எடுத்துள்ளனர். வாருங்கள் மகாவதார் நரசிம்மா விமர்சனத்தை பார்ப்போம்.

மகாவதார் நரசிம்மா கதைச்சுருக்கம்

அசுர குலத்தில் பிறந்த ஹிரண்யகசிபு மற்றும் ஹிரண்யாஷவை விஷ்ணு பகவான் எப்படி வராஹ (பன்றி ரூபம்) அவதாரம் மற்றும் நரசிம்ம அவதாரம் எடுத்து கொன்றார் என்பதே மகாவதார் நரசிம்மா.

மகாவதார் நரசிம்மா விமர்சனம்

அசுர குலத்தில் பிறந்த ஹிரண்யகசிபு, ஹிரண்யாஷ உலகை ஆழ வேண்டும் என நினைக்கின்றனர். மந்திரங்களை கற்று சக்திகளை பெற்று தேவர்களை அடிமையாக்குகின்றனர். அப்போது விஷ்ணு பகவான் பன்றி அவதாரம் எடுத்து ஹிரண்யாஷை அழிக்கிறார். இதையடுத்து தீவிர தவமிருந்து ஹிரண்யகசிபு பிரம்மாவிடம் இருந்து சக்திகளையும், சாகா வரத்தையும் பெறுகிறார். எனினும் அவரது மகன் பிரகலாதன் தீவிர விஷ்ணு பக்தனாக பிறக்கின்றான். ஒரு கட்டத்தில் ஹிரண்யகசிபு பிரகலாதனை கொல்ல துணிகிறார். அப்போது விஷ்ணு பகவான் நரசிம்ம அவதாரம் எடுக்கிறார். இதை 2 மணி நேர அனிமேஷன் படமாக எடுத்துள்ளனர்.

மகாவதார் நரசிம்மா பாஸிட்டிவ்ஸ்

  • ஹாலிவுட் அனிமேஷன் படங்களை பார்த்து பழகிய நமக்கு மகாவதார நரசிம்மா அதே தரத்தில் இருப்பதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
  • கிராஃபிக்ஸ், அனிமேஷன் காட்சிகள் ஒவ்வொன்றும் தரம். புராணக் கதையை படமாக எடுப்பது அவள்ளவு எளிதல்ல. அதை பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.
  • சாம் சி.எஸின் பாடல்கள், பின்னணி இசை மிரட்டல். கண்டிப்பாக தமிழ் திரையுலகை விட இதர மொழிப் படங்களில் வலம் வரப் போகிறார்.
  • புராணக் கதைகளை செவி வழியே கேட்டிருப்போம், புத்தகங்கள், ஓவியங்களில் பார்த்திருப்போம். தத்ரூபமாக நிஜத்தில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ துல்லியமாக காண்பித்துள்ளனர்.

மகாவதார் நரசிம்மா ரேட்டிங் - 5 / 5

குழந்தைகள், புராணக் கதைகளை விரும்பி படிப்போருக்கு மகாவதார் நரசிம்மா கண்டிப்பாக பிடிக்கும். திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் போது பார்த்து மெய் மறந்திடுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP