அந்துருண்டை எனும் பாச்சை உருண்டை ஒரு விதமான பூச்சி கொல்லி ஆகும். அந்துருண்டையின் வாசனையால் அந்துப்பூச்சி ஈர்க்கப்பட்டு அங்கேயே செத்து மடியும். கடந்த காலங்களில் அந்துருண்டையின் பயன்பாடு மாறியுள்ளது. இதை துணி, மரச்சாமான்களின் கெட்ட வாசனையை நீக்க பயன்படுத்தி வருகிறோம். அந்துருண்டை துணி, மரச்சாமான்கள், கட்டில் மற்றும் மெத்தை பொருட்களை அந்துப்பூச்சி மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து தடுக்கும்.
வீட்டின் பீரோவில் பட்டு துணி, உயர் ரக அடைகளுக்கு கீழ் அந்துருண்டை இருப்பதை பார்த்திருப்போம். ஒரு சில மாதங்களில் அந்துருண்டை காணாமல் போயிருக்கும். அந்துருண்டை காற்றில் கொஞ்சம் கொஞ்சமாக கறைந்து அதன் வேலையை காட்டும். அந்துருண்டையின் முக்கிய பண்பு அந்துப்பூச்சி, கரப்பான் பூச்சிகளிடம் இருந்து துணிகளை பாதுகாப்பதே. அதனால் தான் சில நேரங்களில் துணிக்கு அருகே கரப்பான் பூச்சி செத்து கிடக்கும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com