பேரிக்காயில் பொட்டாசியம், வைட்டமின் C, வைட்டமின் K, நார்ச்சத்து, பி-காம்ப்ளக்ஸ் போன்றவை நிறைந்துள்ளன. பேரிக்காய் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் நமது ஆரோக்கியம் தொடர்பான எந்த 5 பிரச்சனைகள் நீங்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
நோய் எதிர்ப்பு அமைப்புக்கு நன்மை செய்கிறது
பேரிக்காய் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால்தான் மாறிவரும் பருவத்தில் மீண்டும் மீண்டும் நோய்வாய்ப்படுபவர்கள் இதை கட்டாயமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் சிறிய வகை நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்கிறது. இது தவிர, பேரிக்காய் சாப்பிடுவது உடலின் குளுக்கோஸை சக்தியாக மாற்றுகிறது. எப்போதெல்லாம் நீங்கள் சோர்வாக உணருகிறீர்களோ, அப்போதெல்லாம் பேரிக்காய் சாப்பிட உடனடி புத்துணர்ச்சி கிடைக்கும்.
இதுவும் உதவலாம்:ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க உதவும் அற்புத பானங்கள்
நார்ச்சத்து நிறைந்தது
பேரிக்காய் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த அற்புதமான மூலமாகும். 1 பேரிக்காயில் 6 கிராம் நார்ச்சத்து உள்ளது, இதை தவிர, பேரிக்காயில் பெக்டின் என்ற பொருள் அதிகம் உள்ளது, இது மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.
மூட்டுவலிக்கு நிவாரணம்
உங்களுக்கு எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் பேரிக்காய் சாப்பிடுவது நன்மை பயக்கும். இதில் போரான் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது கால்சியம் அளவை பராமரிக்க பயனுள்ளதாக இருக்கும். இது தவிர, இதில் உள்ள மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் செம்பு போன்ற தாதுக்கள் வீக்கத்தைக் குறைக்கின்றன. கீல்வாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பேரிக்காய்களை தவறாமல் உட்கொள்ள வேண்டும், ஏனெனில் அவை எலும்பு தேய்மானத்தை குறைக்கின்றன மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கின்றன. மேலும் வைட்டமின் k உள்ளது, இது மிகவும் அத்தியாவசிய வைட்டமின் ஆகும். ஒரு நல்ல எலும்பின் ஆரோக்கியத்திற்கு அவசியம் ஆகும்.
இரும்பு சத்துக்கான நல்ல ஆதாரம்
பெரும்பாலான இந்திய பெண்களிடம் இரும்புச்சத்து குறைபாடு காணப்படுகிறது. அத்தகைய பெண்கள் தினமும் 1 பேரிக்காய் சாப்பிட வேண்டும். பேரிக்காயில் இரும்பு சத்தின் அளவு மிக அதிகம் உள்ளது. அதனால் தான் இதை சாப்பிடும் போது ரத்தசோகை குணமாகிறது. மேலும், கர்ப்ப காலத்தில், பெண்கள் தங்களுக்கும் தங்கள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் தேவையான உணவை எடுத்துக்கொள்வது அவசியமாகிறது, இந்த விஷயத்தில் பேரிக்காய் ஒரு நல்ல தேர்வாகும்.
இதுவும் உதவலாம் :வாழைபழ தோல் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் ஆச்சிரியமூட்டும் ஆரோக்கிய நன்மைகள்
நீரிழிவு நோய் தவிர்க்கப்படுகிறது
பொதுவாக, நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தை மிகக் குறைந்த அளவிலேயே கொண்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். மேலும் பேரிக்காயில் நார்ச்சத்தின் அளவோ மிக அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, ஒரு நாளைக்கு ஒரு பேரிக்காய் சாப்பிட்டாலே போதுமானது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation