சருமம் பிரகாசமாகவும் மென்மையாகவும் பெண்கள் பலரும் சந்தனம் பயன்படுத்துவது வழக்கம். முகத்தில் சந்தனம் பூசுவதற்கும், உடலுக்கு வாசனைப் பொருளாகவும் மட்டுமல்லாமல், ஆயுர்வேதத்தில் இந்த சந்தனம் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக, முகப்பருவைக் குணப்படுத்துவதில் இதற்கு முக்கியப் பங்கு உண்டு. நம் சருமத்திற்கு மட்டும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நீங்கள் சந்தனம் பயன்படுத்தலாம். அந்த வரிசையில் சந்தனத்தின் மருத்துவ குணங்கள் என்ன என்று இங்கு பார்க்கலாம்.
முகப்பருவுக்கான சிகிச்சை:
முகப்பரு பிரச்சினையால் அவதிப்படும் இளம் பெண்களுக்கு சந்தனம் ஒரு சிறந்த தீர்வு. சந்தனத்தையும் மஞ்சளையும் கலந்து பேஸ்ட் செய்து, இரவில் தூங்கும் முன் முகத்தில் பூசினால், 14 நாட்களில் பருக்கள் குறையும். இதை பால் அல்லது தண்ணீரில் கலந்து பூசலாம். மேலும் உங்கள் முகம் பிரகாசமாகவும், உடல் நோய்க்கிருமிகளும் அழியும்.
சொறி மற்றும் பருக்களுக்கான சிகிச்சை:
சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் சொறி மற்றும் சிவப்பு பருக்களுக்கு, சந்தனத்தையும் துளசி சாற்றையும் கலந்து பூசி வந்தால் மூன்று நாட்களில் சொறி பிரச்சனை குணமாகும்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்கான நிவாரணம்:
பெண்கள் பலருக்கும் சிறுநீரை அடக்கி வைப்பதால் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஏற்படும். சந்தனம் கிருமிகளைக் கொல்லும் குளிர்ச்சித் தன்மை கொண்டது. சிறுநீர் பாதை தொற்று மற்றும் வலிக்கு சந்தன சர்பத் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இது சந்தனப் பொடி, சர்க்கரை, வெட்டிவேர் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.
மேலும் படிக்க: ஆளிவிதைகளை இந்த முறைகளில் உடலுக்கு எடுத்துக்கொண்டால் பல நன்மைகள் சேரும்
உடல் குளிர்ச்சி மற்றும் அழற்சி குறைப்பு:
சந்தன சர்பத் குடிப்பது கோடை வெப்பத்தைக் குறைக்கும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் உள்ள எரிச்சல், புண்கள் மற்றும் முகப்பருவைத் தடுக்கும். மேலும், இது இதயம், மூளை மற்றும் கல்லீரலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
தழும்பு மற்றும் கருமை குறைப்பு:
முகத்தின் தழும்புகள் மற்றும் வெயில் கருமையைக் குறைக்க, சந்தனத்தை பால் அல்லது ரோஸ் வாட்டருடன் கலந்து தினமும் இரவில் முகத்திற்கு பூச வேண்டும். இது 10 நிமிடம் உலர்ந்த பிறகு உங்கள் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
தலைவலி மற்றும் சருமப் பிரச்சனைகள்:
- சந்தனத்தை தலையில் பூசினால், கோடை வெயிலினால் ஏற்படும் கொப்புளங்கள் மற்றும் தலைவலி குறையும்.
- எலுமிச்சை சாற்றுடன் சந்தனம் சேர்த்துப் பூசினால், சொறி, சிரங்கு, தேமல் போன்றவை குணமாகும்.
- சந்தன எண்ணெய் சரும செல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.
குறிப்பு:
சந்தனம் உடலுக்கு குளிர்ச்சி தருவதால், குளிர் உணர்வுள்ளவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் இந்த சந்தனத்தை பயன்படுத்த வேண்டும். அதே போல இந்த சந்தனத்தை அதிகம் உட்கொண்டால் இரைப்பைப் பிரச்சனைகள் ஏற்படலாம். சந்தனம் பல நலன்களைத் தரும் இயற்கை மருந்தாக இருந்தாலும், மிதமான அளவு பயன்படுத்துவது நல்லது.
Image source: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation