உயர் இரத்த அழுத்தத்தினால் தலைசுற்றல், செய்யும் வேலையில் ஆர்வம் இன்மை போன்ற பல அறிகுறிகளை நீங்கள் உணரலாம். இது எரிச்சல் தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
இயந்திரங்களை சார்ந்து வாழும் வாழ்க்கை முறையையே பலரும் பின்பற்றுகிறோம். இது உடல் செயல்பாடுகளை குறைத்து பல நோய்களுக்கு வழி வகுக்கிறது. இவை வேலை பழுவை குறைத்து, உடல் நல பிரச்சனைகளை அதிகரிக்கின்றன். இதில் உயர் இரத்த அழுத்தமும் அடங்கும். இதை அலட்சியமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் உயர் இரத்த அழுத்தம் இதயம் தொடர்பான பல பிரச்சனைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலையில் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய அவசியம் உண்டாகிறது.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கான சில இயற்கை தீர்வுகளை இப்பதிவில் படித்தறியலாம்
1. தினமும் 2 பல் பூண்டு சாப்பிடுங்கள்
இரத்தம் தடிமனாக இருப்பது உயர் இரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணமாகும். பூண்டு கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இந்த வகையில் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு பூண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
2. தினமும் பெரிய ஏலக்காயை சாப்பிடுங்கள்
ஏலக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் C மற்றும் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்றுவதுடன், இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இதற்கு 200கிராம் ஏலக்காயை வறுத்து பொடி செய்து கொள்ளவும். கசடுகள் இல்லாமல் ஜலித்தபின் இதை ஒரு காற்று புகாத பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். தினமும் இதில் இருந்து சிறிதளவு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.
3. எலுமிச்சை சாறு
எலுமிச்சை சாறு இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இரத்த நாளங்களை மென்மையாகவும் நெகிழ்வாகவும் மாற்றும். இதற்கு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேன், இஞ்சி மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை வரை குடிக்கலாம்.
4. வெங்காய சாறு மற்றும் தேன்
வெங்காய சாறு இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் இரத்தத்தை சுத்திகரித்து நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. இதற்கு சம அளவு வெங்காய சாறு மற்றும் தேன் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம். இது இரத்த அழுத்தத்திற்கு நல்லது.
5.ஒரு சிறிய துண்டு இஞ்சி
இஞ்சியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகின்றன. இவை தமனிகளை சுற்றியுள்ள தசைகளை தளர்த்துவதுடன், உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கின்றன. இதற்கு இஞ்சியை டீ அல்லது உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
6.வெந்தயத்தை மென்று சாப்பிடவும்
இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீரில் அரை டீஸ்பூன் வெந்தயத்தை ஊற வைக்கவும். மறுநாள் காலையில் தண்ணீரை குடித்த பின்பு வெந்தயத்தை மென்று சாப்பிட வேண்டும். இது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: பாகற்காயின் பக்க விளைவுகள்
7. அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை சாப்பிடுங்கள்
தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து குடிக்கலாம். இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த தீர்வாகும்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க தண்ணீர் போதுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation