இன்றைக்கு மாறி மாறி வரக்கூடிய பருவநிலை மாற்றத்தால் சளி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பல்வேறு உடல் நல பாதிப்புகளைச் சந்திக்க நேரிடுகிறது. இதற்காக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடலாம். ஆனாலும் வீட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் ஊட்டச்சத்துள்ள உணவுகள் முறைகளைக் கொடுத்து உடல் நல பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்கு முயற்சி செய்வார்கள். இவற்றில் முக்கியமான ஒன்றாக இருப்பது சூப் வகைகள். நாட்டுக்கோழியில் செய்யக்கூடிய சூப்கள் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை நிச்சயம் வழங்கும்.
இதுபோன்ற பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய உடல் நல பாதிப்புகளுக்கு மட்டுமல்ல, மனதை ரிஸாக வைத்திருக்க வேண்டும் என்றாலும் சூடான சூப்களை நண்பர்களுடன் சேர்த்து குடிப்பது ஒரு பழக்கம். வாரத்திற்கு ஒருமுறையாவது மசாலாப் பொருட்களைக் கலந்து செய்யப்படும் சிக்கன் சூப்களைக் குடிப்பதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். அவற்றில் சில உங்களுக்காக.
சிக்கன் சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:
- நாட்டுக்கோழி அல்லது பிராய்லர் கோழியை வைத்து செய்யப்படும் சிக்கன் சூப்பைப் பருகும் போது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தசை வளர்ச்சி மற்றும் எலும்புகள் ஆரோக்கியத்திற்குப் பேருதவியாக உள்ளது. குறிப்பாக நாட்டுக் கோழியில் குறைந்த அளவில் புரத சத்துக்கள் உள்ளதால் ஆரோக்கியமான முறையில் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
- கோழியில் நியாசின் என்றழைக்கப்படும் வைட்டமின் பி 3 போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது. இதோடு சரும ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கிறது
மேலும் படிக்க:வாரத்தில் 7 நாட்கள் இவற்றை இரவு உணவாக சாப்பிட்டால் 1 மாதத்தில் 5 கிலோ எடையை தாராளமாக குறைக்கலாம்
- சிக்கன் சூப்பை வாரத்திற்கு ஒருமுறையாவது பருகும் போது இதில் உள்ள வைட்டமின் பி 6 மூளை வளர்ச்சிக்கும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது.
- சிக்கன் சூப் அல்லது சிக்கன் குழம்பில் உள்ள தாதுக்கள் பருவ கால தொற்றுகளைத் தவிர்ப்பதோடு பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. உடலுக்குத் தேவையான ஆற்றலையும் வழங்குகிறது.
- மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி போன்ற பல்வேறு மசாலாப் பொருட்களைக் கலந்து செய்யப்படும் சிக்கன் சூப்பை அதிலும் நாட்டுக்கோழி சூப் பருகும் தொண்டை கரகரப்பு, சளி, இருமல் தொல்லையையும் சட்டென்று போக்குவதற்கு உதவுகிறது.
- ஆரோக்கியம் அளிக்கும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் சுவை மொட்டுகளின் மந்தமான திறனையும் புத்துணர்ச்சியாக்குகிறது.
மேலும் படிக்க:கொய்யா இலைகளைப் இப்படி பயன்படுத்தி ஆரோக்கியமான பற்கள் மற்றும் ஈறுகளைப் பெறவும்
- சிக்கன் சூப் பருகும் போது உடலை எப்போதும் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதோடு உங்களின் மனநிலையை மேம்படுத்தி ஆறுதல் அளிக்கும் உணர்வை உங்களுக்குத் தருவதற்கு உதவியாக உள்ளது. இதுபோன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால் இனி வாரத்திற்கு ஒருமுறையாவது உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்ய மறந்துவிடாதீர்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation