தமிழகம் முழுவதும் சமீப காலங்களாக மழை பொலிவு ஆங்காங்கே அதிகமாகிவருகிறது. இதனால் ஏற்படக்கூடிய குளிர் உடல் நலத்திற்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த சூழலில் நோய் எதிர்ப்பு அமைப்பு வைரஸ்களை எதிர்த்துப் போராடும் போது வைரஸ் தொற்று அதிகரிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சம் இல்லாமல் பாதிக்கக்கூடிய வைரஸ் தொற்றின் போது மருந்து மாந்திரைகள் சாப்பிடுவது ஒரு புறம் இருந்தாலும், சில உணவுகளையும் கட்டடாயம் சாப்பிட வேண்டும். அவற்றில் சில உங்களுக்காக.
வைரஸ் காய்ச்சல் சமயத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள்:
இளநீர்:
காய்ச்சல் நேரத்தில் உடலின் நீர்ச்சத்துக்கள் சட்டென்று குறைய ஆரம்பிக்கும். காய்ச்சல் ஒருபுறம் அதிகமாக இருந்தாலும் இதனால் உடல் சோர்வை சந்திக்க நேரிடும். இந்நேரத்தில் கட்டாயம் இளநீர் குடிப்பது நல்லது. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு உடல் சோர்வை நீக்கவும் உதவியாக உள்ளது. மேலும் காய்ச்சலின் போது அதிக வியர்வையால் ஏற்படக்கூடிய நீர் இழப்பையும் மீட்டெடுக்க உதவுகிறது.
சிட்ரஸ் பழங்கள்:
காய்ச்சலின் போது ஏற்படக்கூடிய உடல் சோர்வைத் தவிர்க்க வேண்டும் என்றால் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை, போன்ற பல்வேறு சிட்ரஸ் பழங்களைச் சாப்பிடுவது நல்லது. இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு தொற்றுநோய்களின் தீவிரத்தைக் குறைக்கவும் உதவுதோடு உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருக்கிறது. காய்ச்சலின் போது ஏற்படக்கூடிய தொண்டை புண்களை விரைவாக ஆற்றுவதற்கும் இப்பழங்கள் உதவுகிறது.
இஞ்சி டீ:
வைரஸ் காய்ச்சலின் போது இஞ்சி டீயை உட்கொள்வது நல்லது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இஞ்சி டீ உதவியாக உள்ளது.
மஞ்சள் பால்:
வைரஸ் தொற்று பாதிப்பின் அறிகுறிகளில் முக்கியமானது தலைவலி, சளி மற்றும் இருமல். இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க வேண்டும் என்றால் மஞ்சள் கலந்த பாலைக் கட்டாயம் குடிக்க வேண்டும். இதில் உள்ள குர்குமின் மற்றும் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகள் தொண்டையில் ஏற்படக்கூடிய புண்களை ஆற்றவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க:குழந்தைகள் அதிகமாக மொபைல் பார்க்கிறார்களா? கண்களைப் பாதுகாக்க இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்.
கஞ்சி:
வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ஏழு நாட்களுக்குத் தொடர்ச்சியாக காய்ச்சல் பாதிப்பு இருக்கும். இதனால் சரியாக சாப்பிட முடியாது மற்றும் ஜீரண சக்தியும் குறைவாக இருக்கும். இந்த நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். குறிப்பாக கஞ்சி சாப்பிடுவது நல்லது.
Image credit - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation