இளமையான தோற்றத் பெற வேண்டுமா? மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் பேஸ் மாஸ்க்!

அதிக செலவு செய்து உங்களது முகத்தை அழகாக்குவதை நிறுத்திவிட்டு வீட்டில் இருக்கும் மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்யைப் பயன்படுத்தி முகத்தைப் பொலிவாக்குவதற்கு முயற்சி செய்யவும்.

 
tips to skin whitening
tips to skin whitening

பெண்களுக்கு பருக்கள் இல்லாத தெளிவான சருமத்தைப் பெற வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். இதற்காக அழகு நிலையங்களுக்கு செல்வது முதல் ரசாயனம் கலந்த அழகு சாதனப் பொருள்களைப் பயன்படுத்துவதைப் பார்த்திருப்போம். இதற்காக பல மணி நேரம் மெனக்கெட்டாலும் நாம் நினைத்ததுப் போன்று முகத்தில் பளபளப்பைப் பெற முடியாது. இனி இந்த கவலை வேண்டாம். ஞ்சள் மற்றும் தேங்காய் கலந்து தயாரிக்கப்படும் மஞ்சள் பேஸ் மாஸ்க் எப்படி செய்வது? இதன் பயன்கள் என்னென்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

face mask glowing

மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் பேஸ் மாஸ்க்:

மஞ்சளில் உள்ள குர்குமின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளாக செயல்படுகிறது. இதை நீங்கள் முகத்தில் அப்ளை செய்யும் போது, சருமத்தை கருமையாக்கும் அல்லது சேதப்படுத்தும் ப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்கிறது. மேலும் மஞ்சளில் உள்ள ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் சரும செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. இதே போன்று தேங்காய் எண்ணெயில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் சருமம் வறண்டு விடாமல் பாதுகாக்கிறது. இவை இரண்டையும் பயன்படுத்தி செய்யக்கூடிய பேஸ் மாஸ்க்கை நீங்கள் பயன்படுத்தும் போது, சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், முகத்தில் ஏற்படுத்தில் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளைத் தடுக்கிறது.

மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் பேஸ் மாஸ்க் செய்முறை:

ஒரு கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி நன்றாக கலந்துக் கொள்ளவும். பேஸ்ட் பதத்திற்கு வந்ததால் போ.தும் முகத்தை பளபளப்பாக உதவும் மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் பேஸ் மாஸ்க் ரெடி

பயன்படுத்தும் முறை:

  • மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் கோல்டன் பேஸ் மாஸ்க்கை பயன்படுத்தும் முன்னதாக சுத்தமான தண்ணீரில் முகத்தை நன்கு கழுவிக்கொள்ளவும்.
  • பின்னர் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவ வேண்டும். கண்கள் மிகவும் சென்சிடிவ் பகுதி என்பதால் அப்பகுதியில் பேஸ் மாஸ்க் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
  • இதை 10 முதல் 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். இதையடுத்து வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவ வெண்டும். பின்னர் சுத்தமான காட்டன் துணியைக் கொண்டு முகத்தைத் துடைக்கவும்.
  • இதையடுத்து முகத்திற்கு மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும்.
coconut oil making

இந்த பேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைப் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பயன்படுத்தும் போது காலப்போக்கில் பிரகாசமான மற்றும் பளபளப்பான சருமத்தை நீங்கள் பெறுவதற்கு உதவியாக இருக்கும். அப்புறம் என்ன? இனி அதிக செலவு செய்து உங்களது முகத்தை அழகாக்குவதை நிறுத்திவிட்டு வீட்டில் கிடைக்கக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தி முகத்தைப் பொலிவாக்குவதற்கு முயற்சி செய்யவும்.

Image Source- Google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP