குளிர்காலத்திலும் சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்கள் நிச்சயம் உதவும்

குளிர்ந்த காற்று சருமத்தை வறண்டு விட செய்வதால் வீட்டிலேயே சில அழகுக்குறிப்புகளைப் பின்பற்றி சருமத்தைப் பொலிவாக்க முயற்சிக்கலாம்.
image

பெண்கள் எப்போதுமே தங்களுடைய சருமத்தை அழகாகவும்,பொலிவுடனும் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு. சில நேரங்களில் பருவகாலங்கள் இதற்கு ஒத்துழைப்பு தருவதில்லை. வெயில்காலத்தில் வரக்கூடிய சரும பிரச்சனைகளை விட குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவது முதல் உதடு வெடிப்பு போன்ற பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் வீட்டிலேயே சில டிப்ஸ்களைப் பின்பற்றி உங்களை அழகாக்கிக் கொள்ள முயற்சி செய்யுங்கள்..

குளிர்காலத்தில் முக பொலிவுடன் இருக்க சிம்பிள் டிப்ஸ்கள்:

பப்பாளி பேஸ் பேக்:

பப்பாளியில் உள்ள வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுக்க உதவுகிறது. குறிப்பாக குளிர்ந்த காற்றால் வறண்டு கிடக்கும் சருமத்தைப் பொலிவாக்க வேண்டும் என்றால், பழுத்த பப்பாளி பழங்களை நன்கு மசித்து முகத்தல் அப்ளை செய்யவும். இவை சருமத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்.

மஞ்சள் மற்றும் பால்:

என்ன தான் வெளியில் செல்லும் போது மாய்ஸ்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தினாலும் குளிர்ந்த காற்று முகத்தை வறண்டு விட செய்யும். இதைத் தவிர்க்க மஞ்சளுடன் பால் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

வெந்நீரைத் தவிர்த்தல்:

குளிரைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக நம்மில் பலர் குடிப்பதற்கு மற்றும் குளிப்பதற்கு என சுடு தண்ணீரைப் பயன்படுத்துவோம். சூடான தண்ணீர் குளிருக்கு இதமாக அமைந்தாலும் சருமம் வறண்டு விடுதல், சரும எரிச்சல், சரும அரிப்பு போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே குளிர்காலத்தில் முடிந்தவரை வெந்நீரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

நீரேற்றத்துடன் இருத்தல்:

குளிர்காலம் மற்றும் மழைகாலங்களில் அதிக தண்ணீர் அருந்தாமல் இருப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து சருமம் வறண்டு விடும். எனவே அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருந்து பொலிவாக்க உதவக்கூடும்.

சன்ஸ்கிரீன் பயன்பாடு:

வெயில் காலத்தில் தான் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. குளிர்காலத்திலும் எப்போது வெளியில் சென்றாலும் கட்டாயம் சன்ஸ்கிரீன் பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க:இந்த அரிசி மாவு ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க, 10 நாளில் முகம் இயற்கையாக பொலிவு பெறும்


வைட்டமின் சி உணவுகள்:

எந்த பருவ சூழலிலும் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்றால் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக ஆரஞ்சு, நெல்லிக்காய் போன்ற உணவுகளைக் கட்டாயம் குளிர்காலத்தில் உட்கொள்ள வேண்டும். இதுபோன்ற வழிமுறைகளைப் பின்பற்றி குளிர்காலத்திலும் சருமத்தைப் பளபளப்பு குறையாமல் பார்த்துக் கொள்ள முயற்சிக்கவும்.

Image credit - Freepik

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP