herzindagi
image

மாவிளக்கு ஏற்றி மகாலட்சுமியை வழிப்பட்டால் நிதி நெருக்கடியில் இருந்து படிப்படியாக விலகலாம்

இந்து மதத்தில் தெய்வங்களுக்கு விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதுபோன்று அரிசி மாவால் செய்யப்பட்ட விளக்கைக் கொண்டு மகாலட்சுமியை வழிப்பட்டால் நிதி பிரச்சனைகள் படிப்படியாகக் குறையும் என்பது ஆன்மிகத்தில் சொல்லப்படும் உண்மை. 
Editorial
Updated:- 2025-07-22, 22:17 IST

இந்து மதத்தில், விளக்கேற்றுவது மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான காரணியாகக் கருதப்படுகிறது. வீட்டில் விளக்கேற்றுவது நேர்மறை ஆற்றலைப் பரப்புகிறது மற்றும் நபரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். விளக்கேற்றுவது வீட்டில் எந்த விதமான பிரச்சனையையும் ஏற்படுத்தாது, மேலும் நிதி நிலையும் வலுவடைகிறது. பலர் வழிபாட்டின் போது பல்வேறு வகையான விளக்குகளைப் பயன்படுத்துகிறார்கள். அகல் விளக்கேற்றுவது போல, தமிழகத்தில் மாவிளக்கு ஏற்றி வழிப்படுவதும் வீட்டிற்கு செழிப்பை அள்ளித்தரும் விஷயமாக இருக்கிறது. குறிப்பாக இந்த ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிப்படுவார்கள், கூழ் ஊற்றும் விழாக்களிலும் இந்த மாவிளக்கு முக்கிய பங்கு வகிக்கும். அதேபோல் பூஜையின் போது மாவு விளக்கில் மகாலட்சுமியை வழிப்பட்டால் என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். 

 

மேலும் படிக்க: அனைத்து செல்வங்களையும் அள்ளித் தரும் கருணையின் மறு உருவம் காஞ்சி காமாட்சி அம்மனின் சிறப்புகள்

மகாலட்சுமிக்கு மாவிளக்கு ஏற்றுவதன் முக்கியத்துவம்

 

அரிசி தூய்மை மற்றும் செழிப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அரிசி மாவால் செய்யப்பட்ட விளக்கை ஏற்றுவது வழிபாட்டுத் தலத்தை தூய்மைப்படுத்துகிறது. அரிசி மாவால் செய்யப்பட்ட விளக்கை ஏற்றுவது மகாலட்சுமியின் ஆசிகளைப் பெறுவதாகவும், நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இது மட்டுமல்லாமல், அன்னபூரணி அம்மனுக்கு அரிசி மிகவும் பிரியமானது. எனவே, சமையலறையிலும் அரிசி மாவால் செய்யப்பட்ட விளக்கை ஏற்ற வேண்டும். இது வீட்டின் உணவுக் கிடங்கு ஒருபோதும் காலியாக விடாது என்று நம்பப்படுகிறது.

maa villaku1

 

மாவிளக்கு ஏற்றுவதன் நன்மைகள்

 

ஒருவரின் யோக சாஸ்திரங்களில் கூறப்படுவது சுக்ரதோஷம் இருந்து, மீண்டும் மீண்டும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டால், வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியின் முன் மாவிளக்கு தீபம் போடுவது நல்லது, அதில் நெய்யை ஊற்றி லட்சுமி தேவியின் ஆரத்தி செய்யுங்கள். இதைச் செய்வதன் மூலம், கிரக தோஷம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும், மேலும் மகாலட்சுமி ஆசிகளை பெறலாம்.

 

மேலும் படிக்க: தலைவலியைக் குறைக்க வீட்டில் எளிதாக பயன்படுத்தக்கூடிய வாஸ்து குறிப்புகள்

மேலும், திருமணத்தில் யாராவது ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், துளசி மாடத்தில் மாவிளக்கு ஏற்றி வழிப்பட வேண்டும். இது நன்மை பயக்கும். மேலும், குடும்பத்தில் யாராவது அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், அந்த நபரை கொண்டு அரச மரத்தின் கீழ் மாவிளக்கு ஏற்றி வழிப்பட்டால் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

maa villaku 2

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com