
கார்த்திகை மாதம் வந்தாலே சுவாமி ஐயப்பன் மற்றும் பழனி முருகன், திருவண்ணாமலை சிவன் போன்ற தமக்குப் பிடித்த இஷ்ட தெய்வங்களுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து தங்களுடைய நேர்த்திக் கடனை மக்கள் நிறைவேற்றுவார்கள். கடவுள் வழிபாட்டிற்கு உகந்த நாள் என்று சொல்வதற்கு ஏற்றார் போல் அனைத்துத் தெருக்களிலும் ஆன்மீக பாடல்கள் காதுகளில் ரீங்காரமாக ஒலிக்கும். புதிய வீடு பால் காய்ச்சினாலும், திருமணம் போன்ற வீட்டில் எந்த சுப நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றாலும் கார்த்திகை மாதத்தில் செய்தால் அந்தளவிற்கு விசேசம் என்பார்கள். இதோடு மட்டுமின்றி கார்த்திகை மாதத்தில் பௌர்ணமி தினத்தில் வரக்கூடிய திருக்கார்த்திகை எனப்படும் பெரிய கார்த்திகை நாளும் மிகவும் விசேசமானது. இந்த நாளில் வீடுகளில் எதிர்மறை எண்ணங்கள் நீங்கி எப்போதும் நேர்மறை எண்ணங்களோடு இருக்க வீட்டில் எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? எப்படியெல்லாம் ஏற்ற வேண்டும்? என்பது குறித்த விபரங்கள் இங்கே.
மேலும் படிக்க: கார்த்திகை மாதத்தில் கடவுளின் அருளைப் பெற வீட்டில் எப்படி விளக்கேற்ற வேண்டும் தெரியுமா?
மேலும் படிக்க: கார்த்திகை மாதத்தில் திருச்செந்தூர் முருகனை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?
பொதுவாக திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட பிறகு தான் அனைத்து வீடுகளிலும் விளக்குகள் ஏற்றுவார்கள். நினைத்தாலே மோட்சம் பெறும் திருவண்ணாமலையில் விளக்கேற்றும் போது, சிவ பெருமான் அனைத்து வீடுகளிலும் வந்து அருள் புரிய வேண்டும் என்பதற்காக இந்த நடைமுறையைப் பின்பற்றுவார்கள்.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com
