
வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டை போல இந்தியா முழுக்க உள்ள மாணவர்களை அடையாளப்படுத்த அபார் ஐடி கார்டு வழங்கும் திட்டத்தை தேசிய கல்விக்கொள்கையில் மத்திய அரசாங்கம் 2020ஆம் ஆண்டு அமல்படுத்தியது. இதற்கு தானியக்க நிரந்தர கல்விக்கணக்கு என அர்த்தம். அபார் ஐடி கார்ட்டை ஒரே நாடு ஒரே மாணவர் ஐடி எனக் கூறுகின்றனர். மாணவர்களின் தகவல் அனைத்தும் அபார் எண் வழியாக சேகரிக்கப்படும். ஆரம்ப பள்ளியில் தொடங்கி மேற்படிப்பு, கல்லூரி படிப்பு வரை பெறும் மதிப்பெண், பட்டம், விருதுகள், சான்றிதழ்கள், உதவிக்தொகை உள்ளிட்ட அனைத்து விவரமும் சேகரிக்கப்படும். 12 டிஜிட்டல் எண்களில் உங்களுடைய மொத்த கல்வி விவரங்களை அடக்கி விடலாம்.

அபார் ஐடி பெறுவதற்கு முதலில் பெற்றோரின் ஒப்புதல் தேவை. பெற்றோரின் விருப்பம் இன்றி மாணவரின் எந்த விவரமும் இணையத்தில் பதிவேற்றப்படாது. பயிலும் கல்வி நிறுவனங்கள் வழியாகவே அபார் ஐடி பெற முடியும்.
குறிப்பு : ஆதார் அட்டையில் இருக்கும் பெயரும் அகாடமிக் பேங்க் ஆஃப்
கிரெடிட்ஸில் கொடுக்கும் பெயரும் ஒன்றாக இருப்பது அவசியம். பள்ளியிலும்,
கல்லூரியிலும் உங்களுடைய கல்வி விவரங்களை ஆசிரியர்கள் அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள்.
மேலும் படிங்க டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு; தேர்வு முடிவுகள் விவரம்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com