தமிழகத்தில் 10 வயது சிறுமி கூட சாலையில் நிம்மதியாக நடமாட முடியாத நிலை நிலவுகிறது. திருவள்ளூரில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை வழிமறித்த கொடூர மனித மிருகன் அச்சிறுமியை கடத்திச் சென்று மிரட்டு அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறான். பாதிப்புக்குள்ளான சிறுமி எப்படியோ அங்கிருந்து தப்பித்து உடலில் காயங்களுடன் தாயிடம் சென்றுள்ளார். சம்பவத்தில் சிசிடிவி ஆதாரங்கள் கிடைத்தும் ஒரு வாரமாக காவல்துறை அந்த மனித மிருகத்தை தேடி வருகின்றனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெரும்பாலான குழந்தைகள், சிறுமிகள் பெற்றோரிடம் உண்மையை கூறிவிடுகின்றனர். எனினும் சில குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட்டு பயத்தில் பெற்றோரிடம் சொல்ல தவறுகின்றனர். இதற்கு தாய், தந்தையாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டில் உள்ள குழந்தை, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டு இருந்தால் உடனடியாக அதை கண்டுபிடிப்பதில் பெற்றோரின் பங்கும் உள்ளது. ஏனெனில் சில குழந்தைகள், சிறுமிகளுக்கு என்ன நடந்தது என புரியாமல் போகலாம். சில சிறுமிகள் பயத்தில் உண்மையை மறைக்கவும் வாய்ப்புண்டு.
பாலியல் துன்புறுத்தலால் உங்கள் குழந்தை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமடைந்தால் முதலில் குழந்தை / சிறுமி பேசுவதை கூர்ந்து கவனிக்கவும்.
பாலியல் குற்றங்களுக்கு கடுமையான சட்டங்ளும், தண்டனைகளும் இருந்தால் இந்தியாவில் பாலியல் குற்றங்கள் ஏன் தொடர்ந்து அதிகரிக்கிறது என்ற கேள்வியை ஒவ்வொரு பெற்றோரும் எழுப்ப வேண்டும். தண்டனைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டால் மட்டுமே அப்பாவி குழந்தைகள், சிறுமிகளின் வாழ்க்கையை பாதுகாக்க முடியும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com