வெள்ளை பூசணியில் கலோரிகள் குறைவாக உள்ளன, வைட்டமின்கள் A, B6, C மற்றும் E, போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, ஃபோலேட், நியாசின் மற்றும் தயாமின் போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது. கரோட்டின், லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் போன்ற தாதுப்புகள் உள்ளன. அப்படிப்பட்ட பூசணியின் சில ஆரோக்கியமான நற்பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
- இது உடல் எடையை குறைக்கிறது
- மனச்சோர்வை போக்குகிறது
- பார்வையை கூர்மையாக்குகிறது
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது
- இருமல் மற்றும் சளிக்கு எதிராக செயல்பட்டு அவற்றை விரட்டுகிறது
- மலச்சிக்கலை போக்குகிறது

உடல் எடையை குறைக்கிறது
வெள்ளை பூசணிக்காயில் அதிக அளவு பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீங்கள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டால், வெள்ளை பூசணியை உட்கொண்டு வரலாம். இது பிரச்சனையை நீக்குவதற்கு உதவியாக இருக்கும். பசியைக் கட்டுப்படுத்தும் அனோரெக்டிஸ் என்று கூறப்படும் பசியில்லாமல் செய்யும் செயல்பாட்டைக் கொண்டுள்ளது. இது தவிர, உடல் பருமனை எதிர்க்கும் பண்புகளும் இதில் உள்ளது, இதனால் இது உடல் பருமனை குறைக்க உதவும்.
மனச்சோர்வை குறைக்கிறது
டிரிப்டோபான் குறைபாடு என்பதே எப்போதும் மனச்சோர்விற்கு காரணமாக இருக்கிறது. எல்-டிரிப்டோபான் என்பது உடலுக்கு இன்றியமையாத ஒரு அமினோ அமிலம். இது நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாத அத்தியாவசியமான அமினோ அமிலம் ஆகும். இந்த அமினோ அமிலம் இதில் அதிக அளவில் நிறைந்து உள்ளது. இரசாயன கலவை சோர்வான மனநிலையை குறைக்க உதவுகிறது, மகிழ்ச்சி மற்றும் நல்ல விதமான உணர்வை தருகிறது.
பார்வையை கூர்மையாக்கும்
வெள்ளை பூசணிக்காயில் லுடீன் மற்றும் ஜியாக்சாந்தின் நிறைந்துள்ளது, இவை கண்களை ஃப்ரீ ரேடிக்கல் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. கண்புரை, மாகுலர் சிதைவு மற்றும் ஆஸ்டிஜிமாடிசம் போன்ற கண் பிரச்சனைகள் உருவாவதைத் தடுக்கிறது. இந்த பூசணிக்காயை தொடர்ந்து உட்கொள்வது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது, ஏனெனில் இதில் வைட்டமின் A நிறைந்துள்ளது. எனவே கண்பார்வை கூர்மையாக இருக்க, வெள்ளை பூசணிக்காயை சாப்பிட வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது
வெள்ளை பூசணிக்காயில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்கிறது. இதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல அதிசயங்களைச் செய்கிறது. எனவே, அவை பல்வேறு வகையான தொற்றுநோய்களுக்கு எதிராக செயல்படுகின்றன.
இருமல் மற்றும் சளிக்கு எதிரான பாதுகாப்பு கவசமாக உள்ளது
இருமல் மற்றும் சளி பிரச்சனையில் இருந்து விடுபட வெள்ளை பூசணிக்காயை பயன்படுத்த வேண்டும். ஒரு ஆராய்ச்சியின் அடிப்படையில், காய்ச்சல் மற்றும் சளிக்கான சிகிச்சையில் வெள்ளை பூசணி ஆயுர்வேத மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
இதுவும் உதவலாம் :நன்கு பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு இவ்வளவு நல்லதா?
மலச்சிக்கலை போக்க உதவுகிறது
மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க வெள்ளை பூசணி பயன்படுத்துவது நன்மை தரும். வாய்வு பிரச்சனையில் இருந்து பாதுகாப்பு தரும் தன்மை மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் காரணமாக, இது மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளில் இருந்து நமக்கு விடுதலை அளிக்கும். மேலும் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும், எனவே கண்டிப்பாக இதை உங்கள் உணவில் ஏதாவது ஒரு விதத்தில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வெள்ளை பூசணிக்காயின் பயன்படுத்துவது, ஆரோக்கியத்திற்கு முற்றிலும் நன்மை பயக்கும், ஆனால் உங்களுக்கு ஏதேனும் நாள்பட்ட நோய் அல்லது வேறு ஏதேனும் உடல்நலம் தொடர்பான பிரச்சனை இருந்தால், அதைப் பயன்படுத்துவதற்கு முன், நிபுணர் ஆலோசனையைப் பெறுங்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation