செம்பருத்தி பூக்களை கொண்டு முடிக்கும், சரும பராமரிப்புக்கு பயன்படுத்தக்கூடிய பியூட்டி டிப்ஸ்

சரும சுருக்கங்களைத் தடுப்பதில் இருந்து தலைமுடி பிரச்சனைகளைக் கட்டுப்படுத்துவது வரை, செம்பருத்தி பூக்கள் பல அதிசயங்களைச் செய்கிறது. உங்கள் அழகு முறையின் ஒரு பகுதியாக செம்பருத்தியை எவ்வாறு மாற்றலாம் என்பதை பார்க்கலாம். 
image

செம்பருத்தி பூ சருமத்திற்கும் கூந்தலுக்கும் நன்மை பயக்கும் என்பது பலருக்குத் தெரியாது. இது சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் சில அற்புதமான பண்புகளைக் கொண்டுள்ளது. செம்பருத்தி ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலத்தின் வளமான மூலமாக இருக்கிறது, இதனால் சருமத்தை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்ற உதவுகிறது. இது வயதானது மற்றும் நிறமி போன்ற சரும பிரச்சினைகளை கையாள்வதி சிறந்தாக இருக்கிறது. அதன் ஏராளமான சரும நன்மைகளைத் தவிர, செம்பருத்தி தலைமுடிக்கும் அற்புதமாக செயல்படுகிறது. உங்கள் சருமம் மற்றும் கூந்தல் பிரச்சனைகளை எதிர்த்துப் போராட அழகு முறையில் இதை எவ்வாறு சேர்க்கலாம் என்பது பார்க்கலாம்.

செம்பருத்தி ஷாம்பு

தலைமுடியில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் ஒட்டும் தன்மையை போக்க விரும்பினால் செம்பருத்தி ஷாம்பு உங்களுக்கு ஏற்றது. உச்சந்தலையில் அதிக அழுக்கு படிந்திருக்கும் போது இதுவும் சிறந்தது. சில செம்பருத்தி பூக்கள் மற்றும் வெந்தய விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அனைத்தையும் ஒன்றாக அரைத்து, அதில் 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைச் சேர்க்கவும். இதை வைத்து தலைமுடியைக் கழுவுங்கள். இதன்முலம் மென்மையான பளபளப்பான முடியைப் பெறுவீர்கள்.

hibiscus flowers 2

செம்பருத்தி ஹேர் ஆயில்

செம்பருத்தி பூக்கள் சிறந்த கூந்தல் சுத்தப்படுத்தியாக இருக்கிறது. தலைமுடி வறண்டு சேதமடைந்து இருந்தால் செம்பருத்தி எண்ணெய் சிறந்த தேர்வாகும். இந்த எண்ணெயை கூந்தலுக்குப் பயன்படுத்துவது அவற்றை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் தேங்காய் எண்ணெயில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் பண்புகள் உள்ளதால் முடி உடைவதைத் தடுக்கும் மற்றும் அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். சில செம்பருத்தி பூக்களை எடுத்து நன்றாக அரைத்து, அதில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உச்சந்தலையில் மசாஜ் செய்வதால் மென்மையான, பளபளப்பான கூந்தலுக்கு வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

மேலும் படிக்க: நீராவி பிடிப்பதால் சருமம் உடனடி பளபளப்பை எப்படி பெற முடியும் என்பதை பார்க்கலாம்

செம்பருத்தி உடல் ஸ்க்ரப்

செம்பருத்தி, தேங்காய் எண்ணெய் மற்றும் காபி தூள் ஆகியவை கலந்து சருமத்தில் தடவி வந்தால் முகம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். காபி கொட்டைகளின் கரடுமுரடான தன்மை இறந்த சரும செல்களை நீக்கி, மென்மையான சருமத்தை பெற உதவுகிறது. தேங்காய் எண்ணெய், உலர்ந்த செம்பருத்தி, குங்குமப்பூ எண்ணெய் மற்றும் உலர்ந்த ரோஜாக்களை ஒரு பிளெண்டரில் கலக்கவும். காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். மென்மையான, மிருதுவான சருமத்திற்கு வாரத்திற்கு 2-3 முறை உடலில் தடவவும்.

tomato scrub 2

செம்பருத்தி, தேன் மற்றும் காபி எக்ஸ்ஃபோலியேட்

தேன் மற்றும் காபி இரண்டும் அற்புதமான சரும பராமரிப்பு நன்மைகளைக் கொண்டுள்ளதால், இவற்றை செம்பருத்தியுடன் கலப்பதால் சருமம் பளபளப்பாக மாறும். காபி மற்றும் செம்பருத்தி சருமத்தை பிரகாசமாக்கும் பண்புகள் கொண்டதால் சருமத்தின் நிறத்தை சமமாக்கும். தேனில் இனிமையான மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் உள்ளதால் சிறந்த கலவையாக அமைகிறது. அரை கப் கொத்திக்க வைத்த காபி தூளுடன் 2 தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டி செம்பருத்தி பூக்களை கலந்து கலவையை வாரத்தில் 2 முதல் 3 முறை முகத்தில் பயன்படுத்தவும்.

செம்பருத்தி பூக்கள் முக நீராவி

செம்பருத்தி செடிக்கு சக்திவாய்ந்த போடாக்ஸ் விளைவு உள்ளதால் முகப்பரு, சூரிய ஒளியால் ஏற்படும் கருமையை நீக்கி, பளபளப்பான சருமத்தை அளிக்கும். ஒரு கைப்பிடி பிரியாணி இலைகள் மற்றும் செம்பருத்தி பூக்களை ஒரு பீங்கான் கிண்ணத்தில் வைத்து, அதில் சூடான நீரை ஊற்றவும். உங்கள் தலையில் ஒரு துண்டை வைத்து, 10 நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சை எடுக்கவும். இந்த நடைமுறையை வாரத்திற்கு ஒரு முறை செய்யவும்.

மேலும் படிக்க: கோடைக்காலத்தில் தலைக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் முடி உதிராமல் நீளமாகவும், அடர்த்தியாகவும் வளரும்

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP