மனதை அமைதிப்படுத்தி நிதானமாக முடிவெடுக்க சவாசனம் பயிற்சி செய்யுங்க!

மன அமைதியின்மை காரணமாக யோசித்து முடிவெடுக்க முடியவில்லையா ? கவலைய விடுங்க. தினமும் சவாசனம் செய்தால் அனைத்தும் மாறிவிடும்.

corpse pose

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாக பார்க்கப் போகும் ஆசனம் சாந்தி ஆசனம். இது சவாசனம் என்றும் சொல்லப்படுகிறது. ஆங்கிலத்தில் Corpse Pose என்று சொல்லப்படுகிறது. சவாசனம் என்றால் உடலை ஆடாமல் அசையாமல் தரையில் படுத்திருப்பது. இது தளர்வு ஆசனம் என்பதால் பயிற்சி ஆசனங்கள் செய்யத் தேவையில்லை. நேரடியாகவே சவாசனம் செய்யலாம்.

shavasana steps

சவாசனம் பயிற்சி

  • முதலில் தரையில் கால்களை நீட்டி நேராக படுக்கவும். சவாசனம் செய்யும் போது முதுகிற்கும் தரைக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கும். இப்படி செய்வதால் உங்கள் முதுகு தளர்வடையாது.
  • இதை சரியாக செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது. தரையில் படுத்தபடி கால்களை பாதியாக மடக்கி இடுப்பு பகுதியை கொஞ்சம் ஒரு அங்குலத்திற்கு மேலே உயர்த்தவும்.
  • இப்போது இடுப்பு பகுதியை கைகளை கொண்டு நீவி விட்டு அப்படியே இடைவெளி இல்லாதபடி கீழே இறக்கவும். நாம் வேகமாக கால்களை நீட்ட முயற்சித்தால் முதுகு தண்டுக்கும் தரைக்கும் இடையே மீண்டும் இடைவெளி ஏற்படும். எனவே முதலில் வலது காலை மட்டும் தரையில் உரசியபடி நீட்டவும்.
  • இதே போல இடது காலை பொறுமையாக தரையில் உரசியபடியே நீட்டவும். இரண்டு கால்களுக்கும் கொஞ்சம் இடைவெளி இருக்கட்டும்.
  • வலது காலை கொஞ்சம் வலது பக்கமாகவும், இடது காலை கொஞ்சம் இடது பக்கமாகவும் திருப்புங்கள்.
  • உள்ளங்கை வெளியே பார்த்தபடி தரையில் வைக்கவும். விருப்பம் இருந்தால் நீங்கள் பிராண முத்திரா வைக்கலாம்.
  • தலையை நேராக பார்த்தபடி உடலை தளர்த்தவும். உங்கள் உடல் தளர்வாகும் வரை இந்த ஆசனத்தை செய்யலாம். சவாசனம் செய்யும் போது இறுக்கமாக இருக்காதீர்கள்.
  • முடிக்கும் போது இரண்டு கால்களையும் சேர்க்காமல் வலது கையை மேலே தூக்கி இடது காலை மடித்து வலது பக்கமாக திரும்பிய பிறகு எழுந்திருக்கவும்.
  • சவாசனம் செய்யும் போது மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உடலை தளர்த்துவதற்காக இந்த ஆசனத்தை செய்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பிற ஆசனங்களை செய்த பிறகு உடலை தளர்த்த சாந்தி ஆசனம் செய்யலாம்.
  • ஆசனத்தின் போது கைகளை தள்ளியே வைக்கவும். நெருக்கமாக கைகளை வைத்தால் தளர்வடைய முடியாது. ஐந்து நிமிடங்கள் முதல் பத்து நிமிடங்கள் வரை சவாசனம் செய்யும் போது உங்கள் மனம் அமைதி பெறும்.

சவாசனம் பயன்கள்

  • இந்த ஆசனம் உங்கள் முழு உடலையும் ஓய்வெடுக்க உதவுகிறது. இதனால் மனநலன் மேம்படும்.
  • இது உங்கள் நினைவாற்றலை அதிகரிப்பதால் பல விஷயங்களில் முழுமையாக கவனம் செலுத்த முடியும். பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் சவாசனம் செய்வது நல்லது.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP