வேளாண்மைக்கும், வேளாண் தொழிலுக்கும் உறுதுணையாக இருந்த காளைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்கள் கொண்டாடக்கூடிய பாரம்பரியமான விழா என்றால் அது தைப்பொங்கல் தான். மார்கழி கடைசி போகி பண்டிகை, தை முதல் நாள் தை பொங்கல், இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் என நான்கு நாள்களும் உழவர்களுக்கான திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆம் முன்பெல்லாம் உழவுத்தொழில் தான் பிரதானமாக இருந்துள்ளது. ஆடி பட்டத்தில் தேடி விதைத்த பயிர்கள் அனைத்தும் 7 மாதங்களில் அறுவடைக்குத் தயாராக இருக்கும். அதாவது மார்கழி கடைசியில் உழவர்கள் அறுவடையை மேற்கொள்வார்கள். இதையடுத்து வேளாண்மை தொழிலுக்கு ஒத்துழைத்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கவே கொண்டாட்டங்களை அவர்களுக்கு ஏற்றவாறு வகுத்துக் கொண்டனர்.
தை முதல் நாள் உழவுக்கு உறுதுணையாக இருந்த சூரியனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு, பின்னர் காளைக்காக மாட்டுப்பொங்கல் வைத்து வழிபடுவார்கள். என்ன தான் இத்திருநாளில் சர்க்கரை பொங்கல் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும் கரும்பிற்கும் தனி இடம் உண்டு. ஏன் பொங்களன்று கரும்பு இவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது? என்ன காரணம்? என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே…
மேலும் படிங்க: தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளைக் கொண்டாட சிறந்த இடங்கள் இது தான்!
இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ள கரும்புகள் தஞ்சை, மதுரை, தேனி, திண்டுக்கல், பரளச்சி போன்ற பல்வேறு பகுதிகளில் பயிரிடப்படும். இன்னும் பொங்கலுக்கு சில நாள்களே உள்ள நிலையில் அனைத்துப் பகுதிகளிலும் அறுவடை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மேலும் படிங்க: விதவிதமான காட்டன் புடவைகளோடு களைக்கட்டும் பொங்கல் திருநாள்!..
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com