தங்கம் போன்று சருமம் மிளிர வேண்டுமா? மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க

பெண்கள் தங்களது சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தால் மஞ்சளைத் தினமும் பயன்படுத்த வேண்டும். பேஸ் பேக், பேஸ் ஸ்க்ரப் என பல வழிகளில் நீங்கள் உபயோகிக்கலாம்.  
image

இன்றைய தலைமுறையினர் மட்டுமல்ல, பல நூற்றாண்டுகளாக நம்முடைய முன்னோர்கள் சருமத்தைப் பொலிவாக்க பயன்படுத்தியது மஞ்சள். குழந்தைப் பிறந்தது முதல் வயதாகும் வரை மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களது சருமம் முகச்சுருக்கங்கள் இன்றி எப்போதும் பொலிவுடன் இருக்கும். நீங்களும் எப்போதும் சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்றால், மஞ்சளை இந்த வழிமுறைகளில் பின்பற்றத் தொடங்குங்கள்.


இன்றைக்கு அதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவற்றால் சருமம் எப்போது வறண்டு விடுவதோடு அதன் பொலிவுத் தன்மையை இழக்க நேரிடுகிறது. இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வீட்டில் எளிமையான முறையில் தயாரிக்கப்படும் மஞ்சள் முக ஸ்க்ரப் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாரத்திற்கு மூன்று முறையாவது மஞ்சள் ஸ்க்ரப்பைப் பயன்படுத்தும் போது, இதில் பாக்டீரியா மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

முகத்தைப் பொலிவாக்கும் மஞ்சள் ஸ்க்ரப்:

தேவையான பொருட்கள்

  • மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் - 3 டீஸ்பூன்
  • கடலை மாவு - 5 டீஸ்பூன்
  • அரிசி மாவு - சிறிதளவு
  • தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
  • தயிர் - சிறிதளவு

மேலும் படிக்க:வெயிலின் தாக்கத்தால் முகம் கருமையாகி விட்டதா? கவலையே வேண்டாம்... இந்த 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க!

மஞ்சள் ஸ்க்ரப் தயாரிக்கும் முறை:

  • சருமத்தைப் பொலிவாக்கும் மஞ்சள் ஸ்க்ரப் செய்வதற்கு முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் கடலை மாவை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இதனுடன் சிறிதளவு அரிசி மாவு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டால் போதும். முகத்தை ஜொலிப்பாக்கும் மஞ்சள் ஸ்க்ரப் ரெடி. இந்த பேஸ் ஸ்க்ரப்பை ஒரு டப்பாவில் அடைத்து ஒரு வாரம் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உபயோகிக்கலாம்.

மஞ்சள் ஸ்க்ரப் பயன்படுத்தும் முறை:

  • வீட்டிலேயே எளிமையான முறையில் தயாரிக்கும் இந்த மஞ்சள் பேஸ் ஸ்க்ரப்பை தயிர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் அப்ளை செய்யவும்.
  • பின்னர் கை விரல்கள் லேசாக மசாஜ் செய்து விட்டு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது மஞ்சளில் உள்ள அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் ஏற்படக்கூடிய தோல் தொற்று பாதிப்புகளைக் குறைக்கிறது. இதோடு இந்த ஸ்க்ரப்பில் தேங்காய் எண்ணெய்யும் சேர்த்து உபயோகிப்பதால் முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP