herzindagi
image

முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க இந்த கோல்டன் பேசியலை ட்ரை பண்ணுங்க!

திருமணம் போன்ற வீட்டில் நடைபெறக்கூடிய சுப நிகழ்ச்சிகளில் மிகவும் பொலிவுடனும், பிரகாசமாகவும் இருக்க வேண்டும் என்றால் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து இந்த கோல்டன் பேசியலை முயற்சி செய்துப்பாருங்கள்.
Editorial
Updated:- 2025-11-25, 23:43 IST

பெண்கள் தங்களது சருமத்தில் ஏற்படக்கூடிய முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை சரி செய்ய வேண்டும் என்றால் நிச்சயம் முகத்திற்கு மாதத்திற்கு ஒருமுறையாவது பேசியல் செய்ய வேண்டும். அல்லது வீட்டில் உள்ள கடலை மாவு, அரிசி மாவு போன்ற பொருள்களைப் பயன்படுத்தியும் பேசியல் செய்யலாம். இன்றைக்கு அழகு நிலையங்களுக்குச் செல்லாமல் மற்றும் எவ்வித செலவும் இன்றி முகத்தைப் பொலிவாக்க பயன்படுத்தப்படும் கோல்டன் பேசியலை எப்படி செய்ய வேண்டும்? இதனால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்த அழகு சாதனக் குறிப்புகள் இங்கே.

முகத்தை உடனடியாகப் பொலிவாக்கும் கோல்டன் பேசியல்:

அதிக விலைக் கொடுத்து அழகு நிலையங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் உள்ள பால், தேன், மஞ்சள், அரிசி மாவு, கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்திற்குப் பொலிவைப் பெற முடியும். எப்படி இந்த பொருட்களையெல்லாம் பயன்படுத்துவது? என்பது குறித்த வழிமுறைகள் இங்கே.

மேலும் படிக்க: Skin care tips: சரும பராமரிப்புக்கு உதவும் பீட்ரூட்; இனிமே தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க

  • நாம் எப்போது பேசியல் செய்தாலும் முதலில் முகத்தை நன்கு சுத்தம் செய்வார்கள். இது தான் முதல் படி நிலை. வீட்டில் பேசியல் செய்கிறீர்கள் என்றால், முதலில் பால், தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும். இதை முகம் மற்றம் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்யவும். தேனில் உள்ள பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள் சருமத்தில் படிந்துள்ள அழுக்குகளை அகற்ற உதவுகிறது.
  • இதையடுத்து அரிசி மாவு மற்றும் தயிர் சேர்த்து பேஸ் ஸ்க்ரப் தயார் செய்துக்கொள்ளவும். முதலில் முகத்தில் தடவி இருந்த தேன் கலவை காட்டன் துணியால் துடைத்த பின்னதாக தயாரித்து வைத்துள்ள தயிர் ஸ்க்ரப்பைப் பயன்படுத்தவும்.
  • இரண்டு நிமிடங்களுக்குப் பின்னதாக சூடான நீரில் 1 அல்லது 2 நிமிடங்களுக்கு முகத்தில் ஆவி பிடிக்கும். இவ்வாறு செய்யும் போது எண்ணெய் பிசுபிசுப்பை நீக்கி முகத்தில் உள்ள பருக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைய செய்கிறது.

மேலும் படிக்க: Rice Water for Hair Growth: சில வாரங்களிலேயே முடி உதிர்வை கட்டுப்படுத்தி அடர்த்தியான கூந்தலை பெற வேண்டுமா? அரிசி தண்ணீரை இப்படி பயன்படுத்தவும்

  • நான்காவது படிநிலையாக சருமத்திற்கு மசாஜ் செய்யுதல். கற்றாழை ஜெல் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலவையாக தயார் செய்து அப்ளை செய்யவும். 3 அல்லது 4 நிமிடங்கள் முகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும். இதை காட்டன் துணி அல்லது காட்டனைக் கொண்டு நன்கு சுத்தம் செய்த பின்னதாக பேஸ் பேக் போட வேண்டும்.
  • இதற்கு கடலை மாவு, மஞ்சள் மற்றும் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் பேஸ் பேக் போன்று தடவிக் கொள்ளவும். இறுதியாக எண்ணெய் கொண்டு முகத்தை மாய்ஸ்சரைசர் செய்யவும். முகத்தில் உள்ள பாக்டீரியா தொற்றுகள் மற்றும் பூஞ்சை தொற்றுகளை நீக்கி சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும். அப்புறம் என்ன? இனி அதிக செலவில்லாமல் வீட்டில் கிடைக்கும் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை வைத்து கோல்டன் பேசியல் செய்யவும்.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com