இன்றைய பொருளாதார சூழலில் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படும் சூழலில், சருமத்தைப் பாதுகாக்க பலரும் அக்கறை காட்டுவதில்லை. ஆனாலும் சில நேரங்களில் வீட்டில் நடக்கும் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் போது ப்யூட்டி பார்லர்களுக்குச் சென்று அதிக செலவு செய்து முகத்தை அழகாக்கிக்கொள்ள முயற்சி செய்வார்கள். இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம். அதிக செலவு இல்லாமல் ஆரோக்கியமான முறையில் முகத்தைப் பொலிவாக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரிசி மாவை இப்படி பல வழிகளில் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். அவற்றில் சில உங்களுக்காக.
முகம் பளபளப்பாக அரிசி மாவைப் பயன்படுத்தும் முறைகள்:
தயிருடன் அரிசி மாவு:
1 தேக்கரண்டி அரிசி மாவு மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் போன்று கலந்துக் கொள்ளவும். பின்னர் இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருக்கவும். இதையடுத்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவும் போது இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தைப் பொலிவாக்க உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கும் உதவுகிறது.
மஞ்சளுடன் அரிசி மாவு:
அரிசி மாவு மற்றும் சிறிதளவு மஞ்சள், வெல்லம் சேர்த்து பேஸ் பேக் தயார் செய்யவும். இதை முகம மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவும் போது முகம் ஜொலிப்புடன் இருக்கும்.
தேங்காய் பாலுடன் அரிசி மாவு:
தயிர் மற்றும் மஞ்சள் மட்டுமின்றி அரிசி மாவை தேங்காய் பாலுடன் கலந்து பேஸ் பேக் தயார் செய்யலாம். பொதுவாகவே தேங்காயை எந்தளவிற்கு உணவு முறையில் சேர்த்துக் கொள்கிறோமோ? அந்தளவிற்கு எப்போதும் இளமையான தோற்றத்துடன் இருக்க முடியும் என்பார்கள். அதே போன்று தான் தேங்காய் பாலுடன் சிறிதளவு அரிசி மாவு கலந்து முகத்தில் அப்ளை செய்யும் போது சருமம் ஜொலிப்புடன் இருப்பதோடு எப்போதும் இளமையான தோற்றத்தைப் பெற முடியும்.
எலுமிச்சையுடன் அரிசி மாவு:
அரிசி மாவை எலுமிச்சை சாறுடன் கலந்து முகத்தில் பேஸ் பேக் போன்று அப்ளை செய்யலாம். முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றவும், பளபளப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.
மேலும் படிக்க:வறண்ட சருமம் உள்ளதா? வீட்டிலேயே செய்யும் இந்த டோனர்களைப் பயன்படுத்துங்க!
இதே போன்று கற்றாழையுடன் அரிசி மாவு, தேனுடன் அரிசி மாவு போன்றவற்றை பேஸ் பேக் போன்று முகத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். பினனர் குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவும் போது சருமம் ஜொலிப்புடன் இருக்கும். அப்புறம் என்ன இனி அதிக செலவு இல்லாமல் முகத்தைப் பளபளப்பாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அரிசி மாவை இப்படி பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation