முக அழகைக் கெடுக்கும் தேமல்; சரிசெய்வதற்கான எளிய வீட்டு வைத்திய முறைகள் இவை தான்

ஊட்டச்சத்து குறைபாடு, சோப்பை மாற்றி உபயோகித்தல், அலர்ஜி போன்ற பல்வேறு பாதிப்புகளால் சருமத்தில் வெண்மை நிறத்தில் தேமல் ஏற்படக்கூடும். இவற்றிலிருந்து தப்பிக்க உதவும் சில வீட்டு வைத்திய முறைகள் இங்கே
image
image

நமது உடலை வெயில், மழை போன்ற பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்வது தோல். இதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாவிடில், மலேசேசியாஃபர்பர் எனும் கிருமிகளாலும் முகம், கழுத்து உள்ளிட்ட உடலில் அனைத்து இடங்களிலும் வெண்மை நிறத்தில் காணப்படும் தேமல் ஏற்படக்கூடும்.இவற்றை முறையாக கண்டுகொள்ளாவிடில் விரைவில் உடல் முழுவதும் வேகமாக பரவி சருமத்தின் அழகைக் கெடுத்துவிடும். மற்றவர்களின் பார்வைக்கு ஏதோ நோய் பாதிப்பால் அவதிப்படுகிறார்கள் என்ற பார்வையை ஏற்படுத்தக்கூடும். இவற்றைத் தவிர்க்க விரும்பினால் வீட்டிலேயே சில எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றலாம். அவற்றில் சில உங்களுக்காக.



தேமலைக் குணப்படுத்தும் வீட்டு வைத்திய முறைகள் :

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆடாதொடா:


தேங்காய் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதனுடன் சிறிதளவு ஆடாதொடா இலைகளை அதனுள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை இரண்டு நாட்களுக்கு வெயிலில் வைத்து எடுக்கவும். அப்படி செய்யும் போது இலையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் எண்ணெயில் இறங்கி விடக்கூடும்.

பின்னர் இந்த எண்ணெய்யை தினமும் இரண்டு முறை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வரும் போது முகத்தில் இருக்கும் தேமல்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும்.

adathoda

மேலும் படிக்க:இனி அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டாம் - உங்கள் சருமத்தை வீட்டிலேயே ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்

தேமலைப் போக்கும் முள்ளங்கி:


தேமல் உள்ள இடங்களில் முள்ளங்கியில் மோர் தடவி பயன்படுத்தலாம். இதற்கு முதலில் முள்ளங்கியைத் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். இவற்றை மோரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஊற வைத்துக் கொள்ளவும். இறுதியில் தேமல் உள்ள இடங்கள் முழுவதும் தடவிக் கொள்ளவும். சிிறது நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைகம கழுவினால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக தேமல் குறையக்கூடும்.



  • வேப்பிலை சாறு அல்லது வேப்பிலை இலையை நன்றாக அரைத்து தேமல் உள்ள இடங்களில் அப்ளை செய்யலாம். வேப்பிலை கிருமி நாசினி என்பதால் முகத்தில் வரக்கூடிய தேமலை சரிசெய்ய உதவக்கூடும்.
  • இதே போன்று துளசி இலைகளையும் நன்றாக அரைத்து முகத்தில் அப்ளை செய்யலாம்.
  • வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை இரண்டையும் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவற்றையும் தேமல் உள்ள இடத்தில் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தைக் கழுவ வேண்டும்.

மேலும் படிக்க:குளிர்காலத்திலும் சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா? இந்த டிப்ஸ்கள் நிச்சயம் உதவும்

avoid soap.

  • ஒரு சிலருக்கு கெமிக்கல் நிறைந்த சோப்புகளாலும் தேமல் வரக்கூடும் என்பதால் மருத்துவரின் பரிந்துரையின் படி சோப்புகளைப் பயன்படுத்தவும். இல்லையெனில் கடலை மாவு மற்றும் பாசிப்பயறு மாவு இரண்டையும் கலந்து உபயோகிக்கலாம்.

Image source - freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP