பெண்களின் நெற்றி வழுக்கையில், 15 நாட்களில் முடி வளர இந்த டோனரை தயாரித்து பயன்படுத்தவும்

உங்கள் தலைமுடி தொடர்ந்து நொறுங்கி உடைந்து உதிர்ந்து போகிறதா? சில இயற்கையான வழிகளில் வழுக்கை திட்டுகளில் மீண்டும் முடி வளரச் செய்யலாம். இந்தப் பதிவில் உள்ள செய்முறையை வீட்டில் நீங்களே தயாரித்து பயன்படுத்துங்கள். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் விரைவில் கிடைக்கும்.
image

தற்போதைய நவீன காலத்து பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை தலைமுடி உதிர்வு. தொடர்ந்து தலைமுடி உதிர்ந்து வருவதால் பெரும்பாலான பெண்கள் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். அல்லது தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் பியூட்டி பொருட்களை வாங்கி பயன்படுத்தினாலும் தலைமுடி உதிர்வுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

குறிப்பாக தற்போதைய நவீன காலத்தில் 25 வயதிலிருந்து இருக்கக்கூடிய இளம் பெண்களுக்கு கூட முன் தலையில் வழுக்கை திட்டுகள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இதற்கு முழுவதுமாக அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல் சில இயற்கையான பொருட்களை வைத்து முன் வழுக்கை திட்டுகளில் மீண்டும் முடியை வளர செய்யலாம். இந்த பதிவில் இரண்டு இயற்கையான பொருட்களை தண்ணீரில் கலந்து ஒரு இயற்கை செய் முறையை நீங்கள் செய்யப் போகிறீர்கள். அது உங்கள் முன் தலையில் உள்ள வழுக்கை திட்டுகளை சரி செய்து மீண்டும் முடியை வளரச் செய்யும். இந்த பதிவில் உள்ள தயாரிப்பு செய்முறை உங்களுக்கு கட்டாயம் நல்ல முடிவுகளை தரும்.

பெண்களுக்கு முன் தலையில் வழுக்கை திட்டுகளுக்கு என்ன காரணம்?

Untitled design - 2025-02-15T012547.580


தவறான உணவு முறை பழக்கவழக்கம். குறிப்பாக ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பியிருப்பது. பெரும்பாலும் முடி உதிர்தல் பிரச்சனை தலையின் மேற்புற பகுதியில் இருந்து தொடங்குகிறது. மன அழுத்தம் எதிர்காலத்தின் பதற்றம் காரணமாக தங்களை தாங்களே கவனிக்க முடியாமல் போகிறது. முடி உதிர்தலுக்கு இது மட்டும் காரணம் அல்ல பல்வேறு உடல்நல பிரச்சனைகளும் இதில் அடங்கும். முதலில் தலைமுடிக்கு தகுந்த கவனிப்பை பெண்கள் செய்தாலே முடி உதிர்தலை கட்டாயம் குறைக்கலாம். முடி உதிர்வை குறைக்க என்ன செய்ய வேண்டும், உதிர்ந்த முடியை மீண்டும் வளரச் செய்ய எந்த இயற்கை முறையை பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

முடி வளர்ச்சிக்கு இந்த இயற்கை செய்முறையைத் தயாரிக்கவும்

பெண்களின் முன் தலையில் வழுக்கை திட்டுகளில் 15 நாட்களில் முடி வளர இதை செய்யவும். முடி வளர்ச்சி டோனரை உருவாக்குவதற்கான செய்முறையை தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

rosemary-plants-at-home_0_1200

  • தண்ணீர் - 200 மிலி
  • கிராம்பு - 3-4 டீஸ்பூன்
  • ரோஸ்மேரி - 2-3 டீஸ்பூன்

குறிப்பு- உங்களிடம் உலர்ந்த ரோஸ்மேரி இலைகள் இருந்தால், இரண்டு முதல் மூன்று டீஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள், பச்சை ரோஸ்மேரி இருந்தால், அதில் 3-4 மொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

முடி வளர்ச்சி டோனரை எவ்வாறு தயாரிப்பது?

  1. முதலில், ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் 200 மில்லி தண்ணீரைச் சேர்த்து சூடாக்கவும்.
  2. தண்ணீர் லேசாக கொதிக்க ஆரம்பித்ததும், ரோஸ்மேரி இலைகள் மற்றும் 3-4 தேக்கரண்டி கிராம்புகளை வாணலியில் சேர்த்து கொதிக்க விடவும்.
  3. இரண்டு பொருட்களையும் தண்ணீரில் 10 நிமிடங்கள் அப்படியே விடவும், நேரம் முடிந்ததும், தண்ணீரை பொருட்களுடன் சேர்த்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேமிக்கவும்.
  4. இப்போது ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துங்கள், பின்னர் உங்கள் முடி வளர்ச்சி அதிகரித்து இருப்பதை பாருங்கள்.

இந்த பதிவில் உள்ளது போல் ரோஸ்மேரி இலைகளை வைத்து வீட்டிலேயே நீங்கள் தயாரிக்கும் இந்த முடி வளர்ச்சி டோனர், உங்கள் தலைமுடியில் முடி இல்லாத இடங்களில் மயிர் கால்களுக்கு ஊட்டமளித்து, உதிர்ந்து உடைந்த முடிகளை சரி செய்து மீண்டும் தலைமுடியை 15 நாட்களில் வளரச் செய்யும். நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் சில நாட்களிலேயே உங்களுக்கு கிடைக்கும் அதை நீங்களே உணர்வீர்கள்.

மேலும் படிக்க:பெண்களின் ஒட்டு மொத்த தலைமுடி பிரச்சனைக்கு ஒரே தீர்வு வெந்தய சீரம் - வீட்டில் செய்வது எப்படி?

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP