பிரகாசமான ஜொலிக்கும் சருமத்தை அடைவதற்கு எப்போதும் விலையுயர்ந்த சிகிச்சைகள் தேவையில்லை. ஒரு சில நேரங்களில், சிறந்த தீர்வுகள் இயற்கை பொருட்களில் இருந்து வருகின்றன. அது போன்ற ஒரு சக்திவாய்ந்த ஜூஸ் தான் இந்த அம்லா கீரை ஜூஸ். குறிப்பாக வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் உட்கொள்ளும்போது அதிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. அந்த வரிசையில் அம்லா கீரை ஜூஸ் செய்வது எப்படி என்றும் அதன் நன்மைகள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்ப்போம்.
வெறும் வயிற்றில் அம்லா கீரை ஜூஸ்:
காலையில் இந்த நெல்லிக்காய் கீரை ஜூஸ் குடிப்பது உடலில் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இது உடலை நச்சுத்தன்மையற்றதாக மாற்றி மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இது உங்களுக்கு தெளிவான, பளபளப்பான சருமத்திற்கு வழிவகுக்கிறது.
நெல்லிக்காய் கீரை ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:
- 1 நெல்லிக்காய்
- 1⁄2 கப் கீரை இலைகள்
- எலுமிச்சை- 1/2 கப்
- தேன்-1 ஸ்பூன் (இனிப்பு தேவைப்பட்டால்)
- 1/2 கப் தண்ணீர்
நெல்லிக்காய் கீரை ஜூஸ் செய்வது எப்படி?
முதலில் நாம் எடுத்த வைத்த நெல்லிக்காய் மற்றும் கீரை இலைகளை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து ஜூஸ் அடித்து கொள்ளுங்கள். பிறகு அதில் 1/2 கப் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து கலக்க வேண்டும். இப்போது அரை கப் தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இனிப்பு சுவைக்காக தேவைப்பட்டால் தேன் சேர்க்கவும். உடனடியாக வெறும் வயிற்றில் இந்த ஜூஸை குடிக்கவும். சருமத்தின் நன்மைகளுக்கு, இந்த நெல்லிக்காய் கீரை ஜூஸை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்த பிறகு 30 நிமிடங்கள் வரை வேறு எதுவும் சாப்பிடாதீர்கள்.
வைட்டமின் சி சத்து:
இதில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் இது உங்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் நிறமியைக் குறைக்க உதவும். இது உங்களுக்கு பிரகாசமான நிறத்தை அளிக்க உதவுகிறது.
நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை சுத்தப்படுத்தும்:
கீரையில் குளோரோஃபில் நிரம்பியுள்ளது, இது இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது மற்றும் உடலில் நச்சுகளை வெளியேற்றி, முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளை குறைக்கிறது. அம்லாவின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தில் வெடிப்புகளை தடுக்க உதவும்.
வயதான அறிகுறிகளை எதிர்த்துப் போராடும்:
நெல்லிக்காய் மற்றும் கீரை ஆகியவற்றில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றது. இது முகத்தில் சுருக்கங்கள் மற்றும் மெலிதான கோடுகளை குணப்படுத்தி இளமையான மென்மையான சருமத்திற்க்கு வழிவகுக்கும்.
மேலும் படிக்க: பளபளக்கும் தெளிவான சருமத்திற்கு துளசி; எப்படி பயன்படுத்துவது தெரியுமா?
குறிப்பு:
உங்களுக்கு சிறுநீரக பிரச்சனை அல்லது சிறுநீரக கற்கள் இருந்தால் இந்த நெல்லிக்காய் கீரை ஜூஸ் குடிப்பதற்கு முன்பு மருத்துவரை அணுக வேண்டும் . அதே போல நெல்லிக்காயில் அமிலத்தன்மை அதிகம் இருப்பதால் ஒரு நாளைக்கு ஒரு சிறிய கிளாஸ் மட்டுமே குடித்தால் போதுமானது. அதிக அளவு இந்த ஜூஸ் குடிக்க கூடாது.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation