முகத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உள்ளது. குறிப்பாக முகத்தில் ஏற்படக்கூடிய பருக்களைத் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம்? என்ன மாதிரியான வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றலாம்? என்பது குறித்து கூகுளில் பல தேடல்களை நிச்சயம் நம்மில் அனைவரும் செய்திருப்போம். ஆம் அந்தளவிற்கு முகத்தில் வரக்கூடிய பருக்கள் அழகைக் கெடுப்பதாகவும், தன்னம்பிக்கையின்மை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
முகத்தில் ஏற்படும் சில பருக்கள் வலி மற்றும் மாறாத வடுக்களாக இருக்கும். இந்நேரத்தில் அதிக விலைக் கொடுத்து அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருந்துகள் வாங்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து அழகுச் சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பெருமளவில் உபயோகிக்கப்படும் கற்றாழையை மட்டும் பயன்படுத்தினால் போதும். இதில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள், பாக்டீரிய எதிர்ப்புப் பண்புகள் என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் ஒட்டு மொத்த சரும ஆரோக்கியத்திற்கும், தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளைக் குணப்படுத்துவதற்கும் உதவியாக உள்ளது. இதோ இன்றைக்கு கற்றாழையை எப்படியெல்லாம் சரும பராமரிப்பிற்குப் பயன்படுத்தலாம்? இதனால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்னென்ன? தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
கற்றாழையும் சரும ஆரோக்கியமும்:
சருமத்தைப் பராமரிக்க கற்றாழையை பல வழிகளில் நாம் உபயோகிக்கலாம். குறிப்பாக இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னதாக கற்றாழை ஜெல்லை ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கிக் கொண்டு முகத்தில் அப்ளை செய்யவும். பின்னர் ஒரு காட்டன் துணி அல்லது பஞ்சைக் கொண்டு லேசாக மசாஜ் செய்யவும். இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தை ஈரப்பதமாக்கவும், முகத்தில் உள்ள பருக்கள் மற்றும் தழும்புகளை நீக்க உதவியாக உள்ளது.
இதே போன்று ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் சிறிதளவு ரோஸ் வாட்டரை சிறிய பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, இரண்டையும் நன்கு கலந்துக் கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்யவும். பின்னர் 30 நிமிடங்களுக்குப் பின்னதாக முகத்தை குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவினால் போதும் முகத்தில் உள்ள பருக்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறையக்கூடும்.
கற்றாழை மற்றும் தேன் சேர்த்து பேஸ் பேக் செய்யலாம். இதை வாரத்திற்கு இருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை அப்ளை செய்யும் போது இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்களை அகற்ற உதவுகிறது.
மேலும் படிக்க:பெண்களே.தொப்பையைக் குறைக்க உதவும் காய்கறிகள் இவை தான்!
இதே போன்று முறைகளைத் தொடர்ச்சியாக நீங்கள் பின்பற்றி வரும் போது முகத்தைப் பளபளப்பாகவும், ஜொலிப்புடனும் வைத்திருக்க முடியும். இனி விலையுயர்ந்த அழகு சாதனப் பொருட்கள் வாங்குவதைத்தவிர்த்து விட்டு கற்றாழையைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation