கறிவேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. கறிவேப்பிலையை உணவில் தினமும் சேர்த்து கொண்டால் மிகவும் நல்லது. பச்சையாகவும் மென்று சாப்பிடலாம். அல்லது கறிவேப்பிலை ஜூஸ், கறிவேப்பிலை பொடியாகவும் எடுத்து கொள்ளலால். எனவே, தினமும் கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகல் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது
கறிவேப்பிலையில் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. எனவே கறிவேப்பிலையை தொடர்ந்து உட்கொள்வது நமது உடலை பல்வேறு தொற்றுகள் மற்றும் கிருமிகளுக்கு எதிராக பாதுகாக்கிறது.
இரத்த சோகையைத் தடுக்கிறது
உடலில் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகையை ஏற்படுத்துகிறது. அதிக இரும்புச் சத்து கொண்ட கறிவேப்பிலை இரத்தத்தின் ஹீமோகுளோபின் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
கண் பார்வைக்கு நல்லது
கறிவேப்பிலையில் வைட்டமின் A ஏராளமாக இருப்பதால் பார்வையை மேம்படுத்துவதிலும், கண் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்கள் வறண்டு போவதையும் தடுக்கிறது.
கருத்தரிக்க உதவுகிறது
கருத்தரிக்க முயற்சி செய்யும் பெண்கள் 48 நாட்கள் தொடர்ந்து சாபிட்டால் கருமுட்டை வளர்ச்சி மற்றும் கருப்பை சமந்தமான பல நோய்கள் நீங்கி கருவுற உதவுகிறது.
செரிமானத்திற்கு உதவும்
இலைகளில் உள்ள அதிக நார்ச்சத்து பல இரைப்பை குடல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. கறிவேப்பிலையில் உள்ள பண்புகள், செரிமான பிரச்சனை, வாந்தி ,வயிற்றுப்போக்கு மலச்சிக்கல், பைல்ஸ், குமட்டல், வீக்கம் போன்றவற்றைத் தடுக்கிறது.
இரத்தத்தை சுத்திகரிக்கிறது
இயற்கையாக இரத்தத்தை சுத்திகரிக்கிறது, சோர்வு அறிகுறிகளை மேம்படுத்துகிறது மற்றும் நோய்த்தொற்றுகள் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.
பல் பராமரிப்பு
கறிவேப்பிலையில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை நல்ல வாய் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இலைகளில் உள்ள அத்தியாவசிய சத்துக்கள் பல் ஈறு மற்றும் பற்களை வலுப்படுத்துகிறது, துர்நாற்றத்தை நீக்குகிறது.
சக்கரை நோயாளிகளுக்கு ஏற்றது
நீரிழவு நோயாளிகள் தினமும் எதாவது ஒரு வகையில் கறிவேப்பில்லை எடுத்து கொண்டால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
குறிப்பு : அலர்ஜி பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரிடம் கேட்ட பின்பு கறிவேப்பிலையை உட்கொள்ளவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation