பொதுவாக பஞ்சகவ்யம் என்பது நாட்டு மாட்டில் இருந்து கிடைக்ககூடிய 5 பொருட்களை வைத்து செய்யக்கூடியது. இந்த பஞ்சகவ்யம் விவசாயக் களத்தில் பயிர்களுக்கு வளர்ச்சி ஊக்கியாக செயல்படுகிறது. இயற்கை வேளாண் விஞ்ஞானியான நம்மாழார் பஞ்சகவ்யத்தின் பயன்களை ஒவ்வொரு கிராம விவசாயிகளிடமும் எடுத்துக் கூறி இருக்கிறார். பஞ்சகவ்யத்தை எல்லா பயிர்களுக்கும் தெளிப்பு முறையில் பயன்படுத்தலாம். விவசாயத்தில் பஞ்சகவ்யம் ஈடுபொருளாக பார்க்கப்படுகிறது. இயற்கை விவசாயத்தை செய்யும் பலரும் பஞ்சகவ்யம் உபயோகிக்கின்றனர்.
மேலும் படிங்க வீட்டில் கொத்து கொத்தாய் வேர்க்கடலை சாகுபடி செய்வதற்கான வழிகள்
10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யத்தை கலந்து விவசாய நிலங்களில் தெளிக்கவும். இதனால் பயிர்கள் நல்ல வளர்ச்சி அடையும், விளைச்சல் கிடைக்கும்.
அதே போல விதைகளில் பஞ்சகவ்யத்தை நனைத்து நிலத்தில் விதைக்கவும். இதனால் விதைகளின் முளைப்பு தன்மை அதிகரிக்கும். 6 மாதங்கள் வரை பஞ்சகவ்யம் பயன்படுத்தலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com