நம் உடலில் உள்ள ரத்தத்தின் முக்கிய கூறுகளில் ஒன்று பிளேட்லெட். இந்த பிளேட்லெட் எண்ணிக்கை ரத்தத்தில் குறையாமல் இருப்பது மிகவும் அவசியம். நம் உடலில் சிறிய காயம் ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்தானதாக இருந்தாலும் ரத்தத்தை உறைய வைக்க இந்த பிளேட்லட் அவசியம். இந்த வரிசையில் சில பருப்பு வகைகள், முழு தானியங்கள், நார்ச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் இயற்கையாகவே நம் உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என்று மருத்துவ ஆய்வுகளில் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மாதுளை பழம்:
இந்த மாதுளை பழம் அதன் அழற்சி எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற பண்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் பிரபலமானது. இந்த மாதுளை பழத்தை ஜூஸ் செய்து அல்லது சாலட்கள், ஸ்மூதிகள் செய்து காலை உணவாக சாப்பிட்டு வரலாம். இது நம் உடலில் பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்க உதவி செய்கிறது.
பூசணிக்காய்:
ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை பூசணி ஜூசை சாப்பிட்டு வந்தால் இயற்கையாகவே நம் உடலில் பிளேட்லெட் அதிகரிக்கும். இந்த பூசணிக்காயில் உள்ள வைட்டமின் ஏ சத்து உடலில் உள்ள செல்களால் உற்பத்தி செய்யப்படும் புரதங்களின் ஒழுங்கு முறையை எளிதாக்க பெரிதும் உதவுகிறது. இதனால் ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் கூட தினசரி காலையில் பூசணிக்காய் ஜூஸ் குடித்து வரலாம்.
நெல்லிக்காய்:
பொதுவாகவே டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் பிளேட்லெட் செயல்பாட்டை இழக்கிறார்கள். இவர்களுக்கு பிளேட்லெட் எண்ணிக்கை குறைவாக இருக்கும். இந்த நிலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால் பெரிதும் உதவுகிறது. இந்த நெல்லிக்காய் நம் உடலில் பிளேட்லெட் உற்பத்தியை எளிதாக்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இந்த நெல்லிக்காயை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறுகாய் செய்து வீட்டில் வைத்து சாப்பிட்டு வரலாம்.
திராட்சை:
நம் உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட் வளர்ச்சியை அதிகரிக்க தினமும் திராட்சை சாப்பிட்டு வரலாம். ஏனென்றால் இந்த திராட்சையில் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது. இரும்பு சத்து குறைபாடு ரத்தசோகை போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடும். இதனால் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை பிரச்சனையை நாளடைவில் குணப்படுத்தலாம். இந்த திராட்சையை இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் ஜூஸ் அடித்து குடித்து வரலாம், இல்லையென்றால் ஒரு கிளாஸ் பாலுடன் மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.
பப்பாளி:
சுவை நிறைந்த ஒரு பழம் இந்த பப்பாளி. இந்த பப்பாளி மற்றும் அதன் இலைகள் நம் உடலில் இயற்கையாகவே பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக டெங்கு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட் எண்ணிக்கை அதிகரிக்க செய்யும். இது ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. பப்பாளி பழத்தை சாப்பிடுவதற்கு பதிலாக பப்பாளி இலைகளை வேகவைத்து அதன் சாற்றை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வந்தால் பிளேட்டட் எண்ணிக்கை அதிகரிக்கும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation