இன்றைய காலகட்டத்தில் பல பெண்களும் சரும ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் மற்றும் ஈடுபாடு காட்டி வருகின்றனர். சரும அரிப்பு, எரிச்சல் மற்றும் சருமம் வறண்டு போவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் பொதுவாக மாறிவிட்டது. இது போன்ற சரும பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் சிலருக்கு நெற்றி கன்னங்கள் போன்ற இடங்களில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது பெண்கள் முகத்தில் அழகை கெடுக்கும். என்னதான் இந்த முகத்தில் வளரும் முடிகளை அகற்ற பல்வேறு அழகு சாதன பொருட்கள் இருந்தாலும் ஒரு சில பெண்கள் வாக்சிங் அல்லது ஷேவிங் செய்து வருகின்றனர். பெண்களுக்கு முகத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கு ஹார்மோன் ஏற்றத்தாழ்வு முக்கிய காரணமாக அமைகிறது. முகத்தில் வளரும் முடியை கட்டுப்படுத்த உங்களுக்கு சில எளிமையான இயற்கை வீட்டு வைத்தியங்கள் உதவலாம். அந்த வரிசையில் வீட்டு வைத்தியங்கள் மூலம் முகத்தில் வளரும் முடிகளை அகற்றுவது எப்படி என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முகத்தை சுத்தமாக மற்றும் பளபளப்பாக வைத்துக் கொள்ள ரசாயனப் பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையான முறையில் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற சில வழிகள் உண்டு. முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை அகற்ற ஒரு சிறந்த சக்திவாய்ந்த பொருள் மஞ்சள். இந்த மஞ்சள் நம் உணவு வகைகளில் மட்டும் இல்லாமல் நம் உடல் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் உதவுகிறது. இந்த நிலையில் மஞ்சள் வைத்து வீட்டிலேயே பேஸ் மாஸ்க் தயாரிப்பது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
மஞ்சள் பப்பாளி மாஸ்க்:
பெண்களுக்கு முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும், முகத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் இந்த மஞ்சள் பப்பாளி பேஸ் பேக் உதவுகிறது. பப்பாளி மற்றும் மஞ்சள் பேக் தயாரிப்பது மிகவும் எளிது தான். முதலில் பப்பாளியை தோல் நீக்கி மசித்து கொள்ளுங்கள். இப்போது அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொள்ளலாம். பின்னர் தினசரி இரவு தூங்குவதற்கு முன்பு இந்த கலவையை முகத்தில் தடவ வேண்டும். இதன் மூலம் முகத்தை மென்மையாக்கி உங்கள் முகத்தில் உள்ள முடிகளை அகற்றலாம்.
கடலை மாவு மஞ்சள் மாஸ்க்:
கடலை மாவு மஞ்சள் பேஸ் பேக் உங்கள் முகத்தில் உள்ள தேவையற்ற முடி பிரச்சனையை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த பேஸ் பேக் தயாரிக்க ஒரு ஸ்பூன் அளவிலான கடலை மாவில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்க்க வேண்டும். இதில் அரை டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் சந்தன விழுதை சேர்த்து கலக்க வேண்டும். இவை அனைத்தையும் கலந்து, இரவில் முகத்தில் தடவி 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்ளலாம். வாரம் இரு முறை அல்லது மூன்று முறை இதனை செய்து வந்தால் நாளடைவில் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற முடியும்.
மஞ்சள் பேஸ் பேக் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்:
![What_is_turmeric_face_mask_good_for]()
இயற்கையாக முடி அகற்றும்:
மஞ்சள் அதன் முடி அகற்றும் பண்புகளுக்காக பாரம்பரிய மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு பேஸ் பேக் ஆக சருமத்தின் மேற்புறமாகப் பயன்படுத்தும்போது, மஞ்சள் மயிர்க்கால்களை பலவீனப்படுத்தவும், காலப்போக்கில் முடி வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும். அதே போல நாளடைவில் முகத்தில் வளரும் முடிகள் அடர்த்தியாக வளராமல் இருக்க உதவும்.
சருமத்தை பளபளப்பாக்கும்:
மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இது முடி அகற்றுவதால் ஏற்படும் சிவத்தல் மற்றும் சரும வீக்கத்தை குறைக்க உதவும். இது உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும் விளைவுகளையும் கொண்டுள்ளது. இதனால் உங்கள் சருமம் பிரகாசமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation