பெண்கள் தங்களது முகத்தைப் பளபளப்பாக்க வைத்திருக்க எத்தனையோ அழகு சாதனப் பொருட்களை வைத்திருந்தாலும் அனைவராலும் பயன்படுத்த முடியுமா? என்பது தான் கேள்விக்குறி. இதற்காக கவலைக் கொள்ளாதீர்கள். சமையலில் மிகவும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான தக்காளி ஒன்று போதும். ஆம் எப்படி தக்காளியை வைத்து முகத்தைப் பளபளப்பாக்கலாம்? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம்.
முகத்தைப் பொலிவாக்கும் தக்காளி பேசியல்:
- தக்காளி பேசியல் செய்வதற்கு முதலில் க்ளென்சர் பயன்படுத்தி முகத்தை நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது சருமத்தில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய்யை அகற்ற உதவியாக இருக்கும்.
- இதையடுத்து சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதற்கு தக்காளி மற்றும் 2 டீஸ்பூன் சர்க்கரை, தேன் போன்றவற்றைக் கலந்து ஸ்கரப் தயாரித்துக் கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் நன்கு தடவிக் கொண்டு லேசாக மசாஜ் செய்யவும். தேன் மற்றும் சர்க்கரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்தில் உள்ள அசுத்தங்களை நன்கு சுத்தம் செய்ய உதவுகிறது. தக்காளியைப் பயன்படுத்தி முகத்தை ஸ்கர்ப் செய்த பின்னதாக தண்ணீரை நன்கு சூடுபடுத்தி ஆவி பிடிக்க வேண்டும்.
மேலும் படிங்க:பெண்களின் கண்களுக்கு அழகை மெருகூட்டும் ஐ-லைனரை சரியாக பயன்படுத்துவது எப்படி?
- இவற்றையெல்லாம் மேற்கொண்ட பின்னதாக தான், தக்காளி சாற்றைப் பயன்படுத்தி பேஸ் பேக் செய்து பேசியல் செய்ய வேண்டும். முதலில் எப்படி தக்காளியை வைத்து பேஸ் பேக் தயாரிப்பது என அறிந்துக் கொள்ளுங்கள்.
தக்காளி பேஸ் பேக்:
- தக்காளி சாறு - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - சிறிதளவு
- சந்தன தூள்- 1 தேக்கரண்டி
மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் வைத்து நன்கு கலந்துக் கொள்ளவும். பின்னர் இதை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்ளை செய்து 15 நிமிடங்களுக்கு அப்படியே வைத்துவிட்டு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவிக் கொள்ளவும்.
இறுதியாக காட்டன் துணி அல்லது பஞ்சைப் பயன்படுத்தி சிறிதளவு ரோஸ் வாட்டரைக் கொண்டு முகத்தில் மாய்ஸ்சரைசர் செய்தால் போதும். முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவியாக இருக்கும். இந்த தக்காளி பேசியலை வாரத்திற்கு ஒருமுறையாவது பயன்படுத்தும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் சருமத்தின் நிறத்தைப் பொலிவாக்க உதவும். குறிப்பாக தக்காளியில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்க உதவியாக இருக்கும். அப்புறம் என்ன? இனி நல்ல தரமான அழகு சாதனப் பொருட்களை வாங்க முடியவில்லை என்ற கவலைப் படாதீர்கள். வீட்டில் உள்ள தக்காளி மற்றும் சில பொருட்கள் இருந்தால் போதும் அழகு நிலையங்களுக்கு இணையாக சருமத்தைப் பொலிவாக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image credit - Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation