வெயில் காலத்தில் பல பெண்கள் தலைமுடியின் அழகை அதிகரிக்க மருதாணி பூசுவார்கள். மருதாணி போடுவது கூந்தலின் அழகை அதிகரிக்கும் அதே வேளையில் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆனால் கோடைக்காலத்தில் மருதாணி போடும்போது சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இந்த கட்டுரையில் தலைமுடியில் மருதாணி பூசும்போது என்னென்ன விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும் என்பதற்கான சில குறிப்புகளைபார்க்கலாம். மேலும் தலைமுடியில் மருதாணி பூசும்போது இந்த குறிப்புகளை பின்பற்ற வேண்டும்.
மருதாணி பேஸ்ட்டை செய்யும் முறை
மருதாணி சிறிது நேரத்தில் கலக்கி அவசர அவசரமாக பூசும் பெண்கள் ஏராளம். மருதாணி இது போன்ற வழிகளில் பயன்படுத்தக்கூடாது. தலைமுடியில் மருதாணியைப் பயன்படுத்துவதற்கு முன் ஒரு நாள் அல்லது இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தலைமுடியில் மருதாணியை தடவவும். மேலும் மருதாணியைப் பயன்படுத்துவதற்கு குறைந்தபட்சம் 12 மணிநேரமாவது ஊற வைக்க வேண்டும்.
தலைமுடியைக் கழுவிய பின் மருதாணியைப் பயன்படுத்துங்கள்
மருதாணியை நன்கு ஊற வைத்த பின் தலைமுடியில் தடவ வேண்டும். தலைமுடியை நன்கு கழுவி சுத்தம் செய்த பிறகு மருதாணி பூசு வேண்டும், இப்படி செய்தால் மருதாணியின் முழு பலனும் கிடைக்கும். ஷாம்பூவுடன் தலைமுடியைக் கழுவும் ஒரு நாள் முன்பு இதைச் செய்ய வேண்டும்.
எண்ணெய் பசையுள்ள கூந்தலில் மருதாணி தடவாதீர்கள்
மேலும் படிக்க: முடி வளர்ச்சியை தூண்ட உதவும் வெங்காயம், தயிர் ஹேர் மாஸ்க்
மருதாணி பயன்படுத்துவதற்கு முன் தலைமுடி எண்ணெய் தவவி இருக்க வேண்டாம். பல பெண்கள் தங்கள் தலைமுடி எண்ணெய் பசையாக இருக்கும் போது நேரடியாக மருதாணியை தடவுவார்கள் ஆனால் அவ்வாறு செய்வது தவறானது. தலைமுடியில் மருதாணி பயன்படுத்துவதற்கு முன் தலைமுடியை நன்கு கழுவுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation