மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மிகவும் வெறுப்பூட்டும் தோல் பிரச்சனைகளில் ஒன்றாகும், நம் முகத்தில் உள்ள துளைகள் எண்ணெய், இறந்த சரும செல்கள் மற்றும் பாக்டீரியாக்களால் அடைக்கப்படும்போது சிறிய, வெள்ளை புள்ளிகள் தோன்றும். இதை ஓயிட் ஹெட்ஸ் என்று கூறுவார்கள். கரும்புள்ளிகளைப் போலல்லாமல், வெள்ளைப்புள்ளிகள் தோலின் மேற்பரப்பின் கீழ் மூடப்பட்டிருக்கும், இதனால் அவற்றுக்கு சிகிச்சையளிப்பது சற்று சவாலானது. பல அழகு சாதனப் பொருட்கள் மார்க்கெட்டில் கிடைக்கும் என்றாலும், கடுமையான இரசாயனங்கள் அல்லது விலையுயர்ந்த சிகிச்சைகள் இல்லாமல் இயற்கை வைத்தியம் தான் எப்போதும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வரிசையில் மூக்கில் இருக்கும் வெள்ளை புள்ளிகளை அகற்ற உதவும் வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
மூக்கில் வெள்ளை புள்ளிகள் ஏற்பட என்ன காரணம்?
மூக்கு குறிப்பாக வெள்ளைத் புள்ளிகளால் பாதிக்கப்படுகிறது, ஏனெனில் இது செபாஸியஸ் (எண்ணெய்) சுரப்பிகளின் அதிக செறிவைக் கொண்டுள்ளது. பெரும்பாலும் ஹார்மோன் மாற்றங்கள் அல்லது மரபியல் காரணமாக ஏற்படும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தி, இறந்த சரும செல், அடைக்கப்பட்ட துளைகளுக்குள் பாக்டீரியா வளர்ச்சி, மோசமான தோல் பராமரிப்பு பழக்கம், சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் ஈரப்பதம் போன்றவை தான் இந்த வெள்ளை புள்ளிகள் ஏற்பட முக்கிய காரணம்.
வெள்ளை புள்ளிகளுக்கான சிறந்த இயற்கை வைத்தியம்:
நீராவி சிகிச்சை:
நீராவி எடுப்பது முகத்தில் இருக்கும் துளைகளைத் திறக்க உதவுகிறது, இதனால் அசுத்தங்களை அகற்றுவது எளிது.
எப்படி பயன்படுத்துவது?
- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- நீராவியைப் பிடிக்க உங்கள் தலைக்கு மேல் ஒரு துண்டுடன் கிண்ணத்தின் அருகில் வந்து மூடி கொள்ளுங்கள்.
- 5-10 நிமிடங்கள் அந்த நீராவியில் முகத்தை வைக்கவும், பின்னர் உங்கள் மூக்கை ஒரு சுத்தமான துணியால் மெதுவாக துடைக்கவும். இதற்கு பிறகு துளைகளை இறுக்க ஒரு டோனர் தடவி முகத்திற்கு மசாஜ் செய்யுங்கள்.
பேக்கிங் சோடா ஸ்க்ரப்:
பேக்கிங் சோடா உங்கள் சருமத்தில் இறந்த சரும செல்களை அகற்றவும், துளைகளை அவிழ்க்கவும் உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
- 1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவை ஒரு சில துளிகள் தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.
- மெதுவாக 1 - 2 நிமிடங்கள் வட்ட இயக்கங்களில் மூக்கு மீது இதை மசாஜ் செய்ய வேண்டும்.
- இதற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இதை தொடர்ந்து வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் மூக்கில் இருக்கும் வெண்புள்ளிகள் நீங்கும்.
மேலும் படிக்க: கோடை வெயிலில் சருமத்தை பாதுகாக்க; கற்றாழை தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க
தேன் மற்றும் இலவங்கப்பட்டை மாஸ்க்:
தேன் ஒரு இயற்கையான பாக்டீரியா எதிர்ப்பு, அதே நேரத்தில் இலவங்கப்பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
எப்படி பயன்படுத்துவது?
- 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1⁄2 டேபிள் ஸ்பூன் இலவங்கப்பட்டை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
- இதை மூக்கில் தடவி, 10-15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். இதற்கு பிறகு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
வெள்ளை புள்ளிகள் வராமல் தடுப்பது எப்படி?
ஒரு நாளைக்கு இரண்டு முறை ஒரு மென்மையான க்ளென்சருடன் முகத்தை சுத்தம் செய்யுங்கள். இறந்த சரும செல்களை தடுக்க வாரத்திற்கு 1 - 2 முறை சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்யுங்கள். அதே போல சருமத்தை சமநிலையாக வைத்திருக்க எண்ணெய் இல்லாத மாய்ஸ்சரைசர்களைப் பயன்படுத்துங்கள். பல பெண்கள் செய்யும் ஒரு பொதுவான தவறு மேக்கப் அகற்றாமல் இரவில் தூங்குவது. இது நாளடைவில் வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு வழிவகுக்கும்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation