மூக்கில் கரும்புள்ளிகள் இருப்பது மிகவும் பொதுவானது. குறிப்பாக பெரிய சரும துளைகள் உள்ளவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். கரும்புள்ளிகளை நீக்குவது மிகவும் கடினம். பிளாக்ஹெட்ஸை அகற்ற சந்தையில் பல தயாரிப்புகளை நீங்கள் காணலாம். ஆனால் சில நேரங்களில் இந்த தயாரிப்புகளும் உதவாது. அத்தகைய சூழ்நிலையில் சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சில கரும்புள்ளிகளை நீக்கும் உதவி குறிப்புகளை பார்க்கலாம்.
இதுகுறித்து அழகு நிபுணர் ரேணு மகேஸ்வரி கூறியுள்ளார். நீண்ட நாட்களாக கரும்புள்ளிகளை நீக்காமல் இருந்தால் சருமத்தில் பருக்கள் வரலாம். எனவே அவற்றை நீக்குவது மிகவும் அவசியம்.
வால்நட் ஸ்க்ரப் செய்ய தேவையான பொருள்கள்
- 1 தேக்கரண்டி வால்நட் ஷெல் தூள்
- 1 தேக்கரண்டி தேன்
செய்முறை
வால்நட் ஓடுகளை தூக்கி எறியாமல் அதனை பொடி செய்து அதில் சிறிது தேன் கலக்கவும். அதன் பிறகு இந்த கலவையை மூக்கில் லேசாக தேய்க்கவும். 2 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். அதன் பிறகு மூக்கு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை மென்மையான பருத்தி துணியால் அழுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம் கரும்புள்ளிகள் நீங்கும்.
நினைவில் கொள்ளுங்கள்: நீங்கள் மிகவும் கடினமாக ஸ்க்ரப் செய்ய வேண்டியதில்லை. அப்படி செய்து பயன்படுத்தினால் தோலில் கீறல்களை ஏற்படுத்தும்.
ரவை ஸ்க்ரப் செய்ய தேவையான பொருள்கள்
- 1 தேக்கரண்டி ரவை
- 1 தேக்கரண்டி தயிர்
செய்முறை
ரவை மற்றும் தயிர் கலந்து பின் இந்த கலவையை மூக்கில் தேய்க்கவும். மூக்கை 2 நிமிடம் தேய்த்து பின் முகத்தை கழுவவும். தயிர் ஒரு இயற்கையான தோல் எக்ஸ்ஃபோலியேட்டர். இந்த ஸ்க்ரப் பயன்படுத்துவதன் மூலம் இறந்த சருமம் நீங்கிவிடும்.
நினைவில் கொள்ளுங்கள்ள் உங்கள் சருமம் வறண்டதாக இருந்தால் தயிர்க்கு பதிலாக பால் கிரீம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் தயிர் சருமத்தை மிகவும் வறண்டதாக ஆக்குகிறது.
காபி ஸ்க்ரப் செய்ய தேவையான பொருள்கள்
மேலும் படிக்க: 35 வயதில் சருமத்தில் நிகழும் மாற்றங்களை சுலபமாக தீர்க்க வழிகள்
- 1 தேக்கரண்டி காபி தூள்
- 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல்
செய்முறை
கற்றாழை ஜெல்லுடன் காபி பொடியை சேர்த்து மூக்கை தேய்க்கவும். 2 முதல் 3 நிமிடங்கள் ஸ்க்ரப் செய்த பிறகு உங்கள் மூக்கை சுத்தம் செய்யவும். அதன் பிறகு பருத்தி உருண்டைகளை வெந்நீரில் நனைத்து மூக்கில் வைக்கவும். பின்னர் உங்கள் மூக்கின் தோலை பருத்தி துணியால் அழுத்துவதன் மூலம் கரும்புள்ளிகளை அகற்றலாம். இதனால் கரும்புள்ளிகளை அகற்றுவதில் அதிக சிரமம் இருக்காது.
நினைவில் கொள்ளுங்கள்: மிகவும் சூடான நீரைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் உலர வைக்கும்.
முக்கிய குறிப்பு: உங்கள் சருமம் உணர்திறன் உடையதாக இருந்தால் மேலே குறிப்பிட்டுள்ள தீர்வுகளை முயற்சிக்கும். மேலும் ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். எந்தவொரு தீர்விலிருந்தும் நீங்கள் உடனடி முடிவுகளைப் பெற மாட்டீர்கள். இந்த வைத்தியங்கள் உங்கள் சருமத்தின் நல்ல ஆரோக்கியத்திற்கு மட்டுமே.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation