மன அழுத்தம், காற்று மாசுபாடு, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் எண்ணற்ற பிற காரணிகள் காரணமாக முடி வயதுக்கு முன்கூட்டியே நரைக்க தொடங்குகிறது. நீங்கள் சந்தையில் கிடைக்கும் செயற்கை சாயங்களை பயன்படுத்தலாம் அல்லது பிற சிகிச்சைகளைத் தேர்வுசெய்யலாம், ஆனால் வகை உங்களுக்கு முழுமையான தீர்வை தரும என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. இயற்கையான பொருட்களை விட சிறந்த தீர்வு எதுவும் இல்லை. இவை முன்கூட்டிய வெள்ளை முடியைத் தடுப்பதைத் தவிர மற்ற முடி சார்ந்த பல பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது.
மேலும் படிக்க: முடி வறச்சி மற்றும் உதிர்வு அதிகமாக இருந்தால் இந்த சிறந்த 7 DIY வீட்டு வைத்தியத்தை முயற்சிவும்
நரை முடிக்கு கறிவேப்பிலை
கறிவேப்பிலை நரை முடிக்கு சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது. அவை வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றால் நிரப்பப்பட்டுள்ளன. அவை முடி வேர்களுக்கு ஊட்டச்சத்தை அளித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இந்த இலைகள் முடி இழைகளை வலுப்படுத்தி முடி உடைவதை தடுக்க செய்கிறது. ஒரு கைப்பிடி கறிவேப்பிலை எடுத்து பாத்திரத்தில் போட்டு வறுக்க வேண்டும், இது கருமை நிறத்திற்கு வாந்ததும் பொடி செய்து தலையில் தடவி வந்தால் இயற்கையான ஹேர் டையாக செயல்படும் மற்றும் நரை முடியும் காலப்போக்கில் மறைந்து விடும்.
நரை முடிக்கு சூரியகாந்தி விதைகள், பூசணி விதைகள் மற்றும் எள் விதைகள்
பூசணி, சூரியகாந்தி மற்றும் எள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்ப்பதால் உடலில் தாமிரம், செலினியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் கால்சியம் ஆகியவற்றை உடலில் ஏற்றுவதற்கு உதவியாக இருக்கும். ஆரோக்கியமான வாழ்க்கைக்கும், நல்ல முடி வளர்ச்சிக்கு மற்றும் நரை முடி வரமால் இருக்க இந்த ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த விதைகள் முடி முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க உதவுவது மட்டுமல்லாமல், முடி உதிர்வதையும் தடுக்கும். இதுபோன்ற குறைந்த முயற்சியில் பளபளப்பான முடியை அடையலாம். இந்த விதைகளை சட்னிகள், சாலட் மற்றும் இனிப்புகளில் உட்கொள்ளலாம். உணவின் ஊட்டச்சத்தை மேம்படுத்த இந்த விதைகளை பொடி செய்து பாலுடன் கலந்து கூடிக்கலாம்.
நரை முடிக்கு தேங்காய்
தேங்காய் சமையல்களில் சேர்க்கப்படும் முக்கிய மூலப்பொருளாக இருந்து வருகிறது. தேங்காய் எண்ணெய் நரை முடியை குறைக்கவும், வரமால் தடுக்கவும் உதவுகிறது. புரதம், மாங்கனீஸ், செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது. உச்சதலைக்கு ஊட்டச்சத்தையும் வலிமையையும் வழங்குகிறது. தலைமுடியைக் கழுவுவதற்கு முன் எண்ணெயைத் தடவலாம் அல்லது தேங்காய் எண்ணெயை இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் சேர்க்கலாம். தேங்காய் நீரை உங்கள் வழக்கத்தில் சேர்ப்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் மற்றொரு வழியாகும்.
நரை முடிக்கு செம்பருத்தி மற்றும் ரோஜா மலர்
செம்பருத்தி மற்றும் ரோஜா இரண்டையும் தேநீருடன் உட்கொண்டால் நரை முடியை வருவதை தவிர்க்கலாம். நீங்கள் நரை முடி சேர்ந்த ஹார்மோன் சமநிலையின்மையுடன் போராடும் போது இந்த பொருட்கள் உதவிகரமாக கருதப்படுகின்றன. தலைமுடி முன்கூட்டிய நரைத்தல் மற்றும் முடி மெலிதல் உட்பட பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
வீட்டில் செம்பருத்தி அல்லது ரோஜாப் பூக்கள் இருந்தால் அவற்றின் இதழ்களை அலசி. இவற்றை நீங்கள் காற்று புகாத ஜாடியில் சேமித்து வைக்கலாம் அல்லது பொடி செய்து செமித்து வைத்துக்கொள்ளலாம். கொதிக்கும் தேநீரில் வடிகட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் சில இதழ்களைச் சேர்க்க வேண்டும்.
நரை முடிக்கு நெல்லிக்காய்
நெல்லிக்காய் வைட்டமின் சி நிறைந்துள்ளது மற்றும் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது மற்றும் இழைகள் நரைப்பதைத் தடுக்கிறது. நெல்லிக்காயை மிட்டாய், ஜாம், தூள் வடிவில் அல்லது ஒரு மூலப் பழம் போன்ற பொருட்களை உட்கொள்ளலாம்.
நரை முடிக்கு முருங்கை
மேலும் படிக்க: சுருட்டை முடி உடையாமல் வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற சூப்பர் டீப்ஸ்
முருங்கை அல்லது முருங்கை இலைகள் தலைமுடிக்கு நல்லது. பொருட்கள் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன் ஏற்றப்படுகின்றன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைப்பதாக குறப்படுகிறது மேலும் அதன் எண்ணெய் நரை முடியை முன்கூட்டியே தடுக்க உதவுகிறது. முடி மெலிதல், உடைதல் மற்றும் உதிர்தல் போன்ற முடி பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation