தென்னிந்தியாவில் விசேஷ நாட்களில் புடவை கட்டுவது பராம்பரியமான ஒன்றாகும். அதனால்தான் பெரும்பாலும் புடவைகளை அழகான அணிந்து செல்ல பெண்கள் விரும்புகிறார்கள். ஆனால் சில நேரங்களில் நேரமின்மை காரணமாக, புடவையைச் சரியாக அணிய முடிவதில்லை. ஏனென்றால் புடவையின் மடிப்புகள் மற்றும் பல்லு அதிக நேரம் எடுக்கும். இதுபோன்ற நிலையில் புடவை அணிவதில் பல சிக்கலை சந்திக்க வேண்டியுள்ளது. இனி அந்த கவலை வேண்டாம், புடவையை 2 நிமிடத்தில் கட்டி முடிக்க சில உதவிக்குறிப்பு.
புடவை மடிப்புகளை நன்றாக அழுத்தவும்
புடவையை விரைவாகக் கட்ட விரும்பினால், முதலில் அதை சரியாக அயன் செய்ய வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் சேலை சரியாகக் கட்ட முடியும். நீங்கள் வடிவமைக்க விரும்பும் விதத்தில் முந்தானை பகுதியை அயன் செய்து கொள்ளவும். சேலையின் கீழ் பகுதியிலும் இதுபோல் படித்து வடிவமைத்துக்கொள்ளவும். இப்படி செய்வது உங்களுக்கு எளிதாக இருக்கும், அதிக முயற்சி எடுக்க வேண்டியதில்லை.
புடவை க்ளிப் பயன்படுத்தலாம்
சேலையில் மிகப்பெரிய பிரச்சனை மடிப்புகளை உருவாக்குவது. இதற்கு சேலையின் மடிப்புகளை முன்கூட்டியே வடிவமைக்க முயற்சிக்க வேண்டும். இதற்காக சேலைக்கு பொருந்தக்கூடிய ஒரு க்ளிப்பை பொருத்தி மடிப்பை எடுத்துக்கொள்ளவும். பின்னர் அதை பின் கொண்டு படிப்பு கலையாமல் உருவாக்கிக் கொள்ளவும். இது மடிப்புகளை எளிதாக அமைக்க உதவுகிறது.
சேலையின் பல்லுவை அமைக்கவும்
பல்லுவை சரியாக அமைக்கும் வகையில் சேலையின் மடிப்புகளை எடுத்துக்கொள்ளவும். பின்னர் நீங்கள் அதை பின்கள் மூலம் சரிசெய்து கொள்ளவும். இப்படி செய்வதால் சேலை கட்டும் போது பல்லு கலையாமல் இருக்கும். சேலைகளை முழுமையாக அமைத்த பிறகு ஹேங்கரில் வைத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்து புடவைகளை வைத்துக்கொள்வதால், 2 நிமிடங்களில் புடவையைக் கட்டு முடித்துவிடலாம்.
மேலும் படிக்க: கனமான எம்பிராய்டரி ஆடைகள் அணியும் போது மேக்கப்பில் செய்யக்கூடிய தவறுகள்
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation