herzindagi
glowing face big Image

Glowing Face: பிரகாசமான அழகை பெற வீட்டில் இந்த பாட்டி வைத்தியத்தை செய்யுங்கள்

உங்கள் முகத்தில் உள்ள தழும்புகளை நீக்கினாலோ பளபளப்பான சருமத்தைப் பெறலாம், இதற்கு எளிமையான வீட்டு வைத்தியம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
Editorial
Updated:- 2024-05-11, 20:20 IST

பெண்கள் தங்கள் முகத்தில் இளமைப் பொலிவை இருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பல வகையான வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள். இயற்கையான கூறுகள் வைத்து சருமத்தில் செய்யும் ஃபேஸ் பேக்குகளால் சேதம் ஏற்படுவதில்லை. குறிப்பாக தமது சருமத்தின் தன்மைகளை கண்டு முகத்தில் ஃபேஸ் பேக் பயன்படுத்த வேண்டும். இது சருமத்திற்கு போதுமான ஊட்டச்சத்தை வழங்குகிறது. மேலும் இதன் விளைவுகளை சில நாட்களிலேயே முகத்தில் தெரியும். இதனால் அதிக செலவு செய்யாமல் வீட்டிலேயே உங்கள் சருமத்தை எளிதாக மேம்படுத்த விரும்பினால் இந்த அழகு குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் படிக்க: கோடைக்காலத்தில் மாசற்ற பொலிவான முகத்திற்கு கொரியர்களின் சரும பராமரிப்பு

வீட்டில் தயிர் மற்றும் அரிசி ஸ்க்ரப் செய்யலாம்

rice flour face inside

தயிர் மற்றும் சாதம் பொதுவாக வீட்டில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் உங்கள் முகத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் தழும்புகளை நீக்க இவற்றில் செய்யப்பட்ட பேக்கைப் பயன்படுத்தலாம். இதற்கு அரிசி மாவுடன் தயிர் கலந்து ஸ்க்ரப் தயார் செய்யவும்.

அரிசி மற்றும் தயிர் ஸ்க்ரப் பயனுள்ளதாக இருக்கும்

அரிசி மாவு முகத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை மெதுவாக நீக்குகிறது. அரிசி மாவு மற்றும் தயிர் ஸ்க்ரப் தயாரிக்க முதலில் அரிசியை அரைத்து பின்னர் தயிரில் கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 10 நிமிடம் அப்படியே வைக்கவும். அதன்பின் ஸ்க்ரப்பை நீக்கும் போது சருமத்தை மெதுவாக தேய்த்து உங்கள் முகத்தை கழுவவும். இந்த ஸ்க்ரப் மூலம் உங்கள் முகத்தை சுத்தம் செய்வது வந்தால் முக பளபளப்பைப் பெறுவீர்கள். மேலும் புள்ளிகள் மற்றும் தழும்புகள் இலகுவாக மாற தொடங்கும். வாரம் இருமுறை இந்த ஸ்க்ரப்பைப் பயன்படுத்தினால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

எலுமிச்சை, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றின் கலவை பயனுள்ளதாக இருக்கும்

மேலும் படிக்க:  முகத்திற்கு உடனடி பொலிவு தரும் சுரைக்காய் ஃபேஸ் பேக்... ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்

எலுமிச்சை சாறு வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால் பளபளப்பான சருமத்தைப் பெற எலுமிச்சை சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எலுமிச்சை சாறுடன் தேன் மற்றும் தயிர் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் தடவி வந்தால் சில நாட்களிலே சருமம் களங்கமில்லாமல் காணப்படும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவும்போது குறைந்தது 10-15 நிமிடங்களாவது வைத்திருக்கவும்.

முட்டை ஃபேஸ் பேக் முகத்தின் பொலிவை அதிகரிக்கும்

egg face pack  inside

முகத்தை ஆழமாக சுத்தப்படுத்த இயற்கையான பொருட்களைக் கொண்ட ஃபேஸ் பேக்கை வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கலாம். இதற்கு ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் தயிர், எலுமிச்சை சாறு, இரண்டு பாதாம் பருப்பு, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் சிறிதளவு ஓட்ஸ் தூள் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள். இந்த கலவையை நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும். உதடுகள் மற்றும் கண்களைச் சுற்றி அதைப் பயன்படுத்த வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஸ்க்ரப்பை 20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டுவிட்டு, மென்மையான கைகளால் மசாஜ் செய்து கழுவவும். இந்த ஸ்க்ரப் மூலம் உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com