Mango Benefits: கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய  நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

mango in summer
mango in summer

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பழம் மாம்பழம். இந்த மாம்பழத்தின் சுவைக்கு மட்டுமல்லாமல் இதன் மருத்துவ குணங்களுக்கும் இந்த பழம் மிகவும் பிரபலமானது. நம் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்க மாம்பழம் பெரிதும் உதவுகிறது. இந்த மாம்பழத்தில் கொலஸ்ட்ரால் சோடியம் மற்றும் புரத கொழுப்பு குறைந்த அளவு காணப்படுகிறது. மேலும் இந்த பழத்தில் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 அதிக அளவில் நிறைந்துள்ளது. கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிடுவதனால் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

ரத்த அழுத்தம் குறையும்:

இந்த மாம்பழத்தில் உள்ள வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அளிக்க உதவுகிறது. இந்த மாம்பழத்தில் வலமான அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் சத்து அதிகம் உள்ளது. எனவே ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளுக்கு இந்த மாம்பழம் ஒரு இயற்கையான மருந்தாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: இரவில் இந்த பழங்களை மறந்துக்கூட சாப்பிடாதீங்க!

கொலஸ்ட்ரால் அளவு குறையும்:

கோடை காலத்தில் மாம்பழம் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்து நம் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. அதே போல இந்த மாம்பழத்தில் நார்ச்சத்து அதிக அளவு இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகிவிடும். இது நம் உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமான மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கக்கூடும். இந்த மாம்பழத்தில் உள்ள மாசத்து சர்க்கரையாக மாறுவதால் அதிக அளவில் சாப்பிடும் போது உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

mango Benefit

செரிமானம் சீராகும்:

சில நேரங்களில் நாம் சாப்பிடும் உணவு சரியாக செரிமானம் ஆகாது காரணத்தால் அஜீரணக் கோளாறு வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவை ஏற்படுகிறது. செரிமானமின்மை மற்றும் அமிலத்தன்மையினால் ஏற்படும் உடல் நலப் பிரச்சினைகளை தீர்க்க இந்த மாம்பழம் ஒரு சிறந்த மருந்து. இந்த மாம்பழத்தில் உள்ள செரிமான நொதிகள் இயற்கையான முறையில் உணவு செரிமானம் நடத்திட உதவும்.

ரத்த சோகை குணமாகும்:

இந்த மாம்பழத்தில் அதிக அளவு இரும்பு சத்து இருப்பதால் ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிட்டு வரலாம். இந்த மாம்பழங்களை சரியான நேரத்தில் தேவையான அளவு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை நாளடைவில் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்:

கொளுத்தும் கோடை வெயிலுக்கு மாம்பழம் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவடையும். இந்த மாம்பழங்களில் அதிக அளவு பீட்டா கரோட்டீன் மற்றும் காரோட்டினாய்டு உள்ள காரணத்தினால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம் உடலை வலிமைப்படுத்த பெரிதும் உதவுகிறது.

Image source: google
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP