நாம் தினசரி பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் பட்ஜெட்டுக்குள் அடங்கிவிட வேண்டும் என்பது பல பெண்களின் கனவு. இந்த நிலையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு முகத்தை அழகுபடுத்த முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெண்கள் பலருக்கும் அழகு சாதன பொருள் என்று கூறினாலே மேலைநாட்டு பொருள் தான் ஞாபகம் வரும். ஆனால் அந்த மேலைநாட்டு பெண்களே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை தான் சருமத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அந்த வரிசையில் மேலைநாட்டு பெண்கள் முகத்தில் அழகுக்காக பயன்படுத்தும் ஒரு சிறந்த மருந்து இந்த அரிசி தண்ணீர். இந்த அரிசி கழுவிய தண்ணீரை பளபளப்பான சருமத்திற்கு பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுத்தினால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
அரிசியை ஊறவைத்து அதை நன்றாக கழுவி சமைப்பது வழக்கம். இந்த அரிசி கழுவிய தண்ணீரை பலரும் வீணாக கீழே கொட்டி விடுவார்கள். ஆனால் சிலர் இதை வீணாக்காமல் காய்கறி தோட்டத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இன்னும் சிலர் இந்த அரிசி தண்ணீரை வாழைத்தண்டு, வாழைக்காய் போன்றவற்றை நறுக்கி துணிகளை அலசுவதற்கும் இந்த நீரை பயன்படுத்துவது வழக்கம். இந்த நிலையில் மேலை நாடுகளில் இந்த அரிசி கழுவிய தண்ணீரை முகத்துக்கும் கூந்தலுக்கும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தோல் நோய்கள் வராமல் தடுக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்க!
மென்மையான சருமம்:
நம் சருமத்தின் அழகுக்கும் மென்மையான பளபளப்பான சருமத்தை பெறுவதற்கும், கூந்தலை வலுவாக்கவும் இந்த அரிசி கழுவிய தண்ணீர் பயன்படுத்தலாம். ஜப்பானில் காலம் காலமாக இந்த அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு தான் கூந்தலை பராமரிப்பதாக வரலாறு கூறுகிறது. இந்த அரிசி கழுவிய தண்ணீரில் அப்படி என்னதான் இருக்கு என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.
கூந்தல் வளர்ச்சி:
சமீபத்திய மருத்துவ ஆய்வுகளில் இந்த அரிசி கழுவிய தண்ணீரில் இருக்கும் இனோசிட் என்ற அமிலம் நம் தலைமுடி சேதம் அடையாமல் பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசியை தண்ணீரில் ஊற வைக்கும் போது இதில் இருக்கும் ஸ்டார்ச் நம் கூந்தல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க பெரிதும் உதவுகிறது. இதனால் நீங்கள் தலைக்கு குளிக்க செல்லும் போது இந்த அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்தி வரலாம்.
சரும ஆரோக்கியம்:
இந்த அரிசி கழுவிய தண்ணீரை குறைந்தது 2 மணி நேரம் எடுத்து வைத்திருந்தால் இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நம் சருமத்திற்கு நன்மை பயக்கும். இந்த அரிசி தண்ணீரில் அமினோ அமிலங்கள் மற்றும் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்திருப்பதால் இது நம் சருமத்திற்கு நன்மைகளை அளிக்கிறது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. இதனைத் தொடர்ந்து இந்த அரிசி கழுவிய தண்ணீரை வடித்து ஒரு சிறிய பாட்டிலில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் முகம் சோர்வாக இருக்கும் போது இதை உங்கள் முகத்துக்கு ஸ்பிரே செய்து கொள்ளலாம். இந்த அரிசி கழுவிய தண்ணீரில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் நம் சருமத்தின் மூன்று அடுக்குகளில் சென்று சருமத்தை சுத்தம் செய்ய பெரிதும் உதவுகிறது. இது உங்கள் சருமத்தில் சுருக்கங்கள் இல்லாமல் வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக உங்கள் சருமம் எந்த விதமான மேக்கப் சாதனங்களும் இல்லாமல் இயற்கையாக பளபளக்கும். தினசரி காலை அல்லது இரவு தூங்குவதற்கு முன்பு இந்த அரிசி கழுவிய தண்ணீரைக் கொண்டு முகம் கழுவி வரலாம்.
சரும பிரச்சனைகள் நீங்கும்:
நம் சருமத்திற்கும் தலைமுடிக்கும் அழகை உறுதி செய்யும் இந்த அரிசி கழுவிய தண்ணீர் சரும பிரச்சனைகளை வராமல் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது. தோல் நோய்கள் சரும பிரச்சனைகள் இருப்பவர்கள் தினசரி குளிக்கும் போது அரிசி கழுவிய தண்ணீரை கொண்டு தேய்த்து குளித்து வந்தால் நாளடைவில் சரும பிரச்சனைகள் குணமாகும் என்று மருத்து ஆய்வுகள் கூறுகின்றது. எனவே உங்கள் அழகை இயற்கை முறையில் பராமரிக்க இன்றே அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்திப் பாருங்கள்.
Image source: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation