குளிர்காலத்தில் சருமத்தைப் பராமரிப்பதும், பொலிவுடன் வைத்திருப்பதும் ஒவ்வொரு பெண்களும் பெரும் சவாலான விஷயம். குளிர்ந்த காற்றினால் தோல் விரைவாக பாதிக்கப்படுவதோடு சருமத்தை வறண்டு விட செய்கிறது. எனவே தான் குளிர்காலத்தில் தாகம் இல்லையென்றாலும் உங்களால் முடிந்தவரை அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதோடு தோல் பராமரிப்பு முறைகளை சரியாக பின்பறற வேண்டும்.
உங்களால் கடைகளுக்குச் சென்று அழகு சாதனப் பொருட்களை வாங்க முடியவில்லையென்றாலும், வீட்டு சமையல் அறையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டு,சருமத்தை பளபளபாக்கும் DIY பேஸ் பேக்குகளை நீங்கள் சுலபமாக செய்யலாம். இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே.
தேன் மற்றும் ரோஸ்வாட்டர்
சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து பேஸ் பேக் போன்று உபயோகிக்கலாம். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சருமம் வறண்டு விடுவதைத் தடுப்பதோடு, முகப்பருக்கள் வருவதையும் தடுக்கிறது. இதே போன்று ரோஸ் வாட்டர் சருமத்திற்கு வெளிர் நிறத்தைத் தருவதோடு நாள் முழுவதும் பிரகாசமாக வைத்திருக்க உதவியாக இருக்கும். எனவே குளிர்காலத்தில் முகம் பொலிவுடன் இருப்பதற்கு தேன் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டையும் கலந்து பேஸ் பேக் போன்று முகத்தை அப்ளை செய்யவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும்.
தேங்காய் பால்:
பெண்கள் பளபளப்பான சருமத்தைப் பெறுவதற்கு இயற்கையான பேஸ் பேக்குகளில் ஒன்றாக உள்ளது தேங்காய் பால். தேங்காயை எடுத்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போன்று அரைத்து கழுத்து மற்றும் முகத்தில் அப்ளை செய்யவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முகத்தைக் கழுவும் போது, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முகப்பரு மற்றும் சரும எரிச்சலைத் தடுக்கிறது.
தயிர் மற்றும் மஞ்சள்:
குளிர்காலத்தில் சருமத்தில் உள்ள வறட்சியைக் குறைத்தல், முகப்பருக்களை வருவதைத் தடுத்தல் மற்றும் வயதான அறிகுறிகளைத் தவிர்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தயிர் மற்றும் மஞ்சள் கலந்த பேஸ் பேக்கை உபயோகிக்கலாம். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமம் எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவியாக இருக்கும். எனவே தயிர் மற்றும் மஞ்சள் இரண்டையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்யவும். வாரத்திற்கு இரண்டு முறை இந்த பேஸ் பேக் உபயோகிக்கும் போது சருமம் பளபளப்பாக இருக்கும்.
வாழைப்பழ தோல் மற்றும் தேன்:
அடுத்தப்படியாக வறண்ட சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்க தேன் மற்றும் வாழைப்பழ தோல்களை நன்கு அரைத்து முகத்தில் அப்ளை செய்யவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு ஈரப்பதமான தன்மையை வழங்குவதோடு பளபளப்பான தோற்றத்தையும் பெற உதவியாக உள்ளது.
மேலும் படிக்க:ஒளிரும் சருமத்திற்கான DIY பேஸ் மிஸ்ட் உங்களுக்காக!
சந்தனம் மற்றும் ரோஸ்வாட்டர்:
குளிர்காலத்தில் சருமம் அடிக்கடி வறண்டு போவதைத் தடுக்க வேண்டும் என்றால், சந்தனம் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த பேஸ் பேக்கை உபயோகிக்கலாம். இவை உங்களது சருமத்தை ஈரப்பதமாகவம், சுத்தமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation