herzindagi
image

கூந்தல் இரண்டு மடங்கு வேகமாக வளர தயிரில் இதை கலந்து தடவுங்கள்- சூப்பர் ரிசல்ட் கொடுக்கும்

தலைமுடி நாளுக்கு நாள் அதிகமாக உங்கள் கண்ட்ரோல் இல்லாமலேயே கொட்டுகிறதா? தலைமுடி வளர்ச்சியை இரண்டு மடங்கு அதிகப்படுத்தி முடி உதிர்வை தடுத்து நிறுத்தி பளபளப்பான நீளமான அடர் கருப்பு நிற கூந்தலை பெற தயிரில் இந்த பொருட்களை கலந்து இப்படி தடவுங்கள் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் உடனடியாக கிடைக்கும்.
Editorial
Updated:- 2025-04-11, 00:40 IST

தற்போதைய நவீன காலத்து பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை என்பது தலைமுடி உதிர்வு தலைமுடி வளர்ச்சி இல்லாமல் இருப்பது தான். பெரும்பாலான பெண, தங்களின் முகம் அழகாக தோற்றமளிக்க வேண்டும். குறிப்பாக பல பேர் மத்தியில் முகப்பொலிவாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். அதே போல, கூந்தலும் நீளமாக இருக்க வேண்டும். அதிலும் அடர் கருப்பு கருப்பு நிறத்தில் பொடுகு, பேன்கள், அரிப்பு உள்ளிட்ட தொல்லைகள் இல்லாமல் பல பலப்பாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள். இதற்காக பெரும்பாலான பெண்கள் பல்வேறு விலை உயர்ந்த அழகு சாதன பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள், அதிலும் ஆன்லைன் சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தியும் எந்தவித முடி வளர்ச்சியும் முன்னேற்றமும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.

 

மேலும் படிக்க: முடி கொட்டுவதை நிறுத்தி கூந்தல் வலுமாக, அடர்த்தியாக, கருகருன்னு வளர செம்பருத்திப் பூ ஹேர் பேக்


தலைமுடி நீளமாக வளர வேண்டும் முடி உதிர்வு பிரச்சனை முற்றிலும் இருக்கக் கூடாது என்றால் எப்போதுமே அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல் சில இயற்கையான வழிகளை பெண்கள் கையாள வேண்டும்.

 

இயற்கையின் வரப்பிரசாதமாக இருக்கும் சில பொருட்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து, முடி உதிர்தல் பிரச்சனை முற்றிலும் தடுத்து, பெண்களின் கூந்தலில் இருக்கும் ஒட்டுமொத்த பிரச்சினையையும் போக்கும் வல்லமை கொண்டது. ஆனால் அந்த இயற்கையான பொருட்களை சரியான முறைகளில் நாம் கையாள வேண்டும் அதற்கு சில வழிமுறைகள் உள்ளது. அவை என்னென்ன கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? எந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

கூந்தல் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கும் கற்றாழை

 

Untitled-design---2025-04-07T231209.287-1744047739081

 

கற்றாழை செடியில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொட்டி கிடக்கின்றன. தற்போதைய நவீன காலத்திலும் கூட கற்றாழையில் உள்ள ஜெல்லை பயன்படுத்தி முகத்தை அழகுப்படுத்த பெரும்பாலான பெண்கள் பல்வேறு வழிகளில் கற்றாழையை பயன்படுத்துகிறார்கள். கற்றாழையில் இருக்கும் சில ஊட்டச்சத்து மூலக்கூறுகள் முடி உதிர்வை முற்றிலும் தடுத்து நீளமான கூந்தலை தரக்கூடிய வல்லமை உள்ளது. கற்றாழையை நீங்கள் இந்த வழிகளில் பயன்படுத்தினால் உங்கள் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்து உங்கள் கூந்தலை இரண்டு மடங்கு நீளமாக வளர செய்யலாம். முடி நமது முழு ஆளுமையையும் பாதிக்கிறது. அதனால்தான் ஒவ்வொரு நபரும் நீண்ட, அடர்த்தியான மற்றும் மென்மையான முடியை விரும்புகிறார்கள். ஆனால் பல காரணங்களால் மக்கள் விரும்பிய முடியைப் பெற முடிவதில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கள் முடியின் நீளத்தை அதிகரிக்க பெரும்பாலும் முடி பராமரிப்பு சிகிச்சையை எடுத்துக்கொள்கிறார்கள்.

இயற்கையான கற்றாழை ஹேர் மாஸ்க்

 

1860256-aloe-vera-gel-for-hair

 

தேவையான பொருட்கள்

 

  • கற்றாழை ஜெல்
  • தேங்காய் எண்ணெய்
  • தயிர்

 

செய்முறை

 

  • கற்றாழை செடியை எடுத்து அதன் மேலே உள்ள தோள்களை செய்து நடுவில் இருக்கும் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து எடுக்கவும்.
  • பிரித்து எடுத்த ஜெல்லை குளிர்ந்த நீரில் 3 முறை நன்றாக கழுவும்.
  • ஒரு மிக்ஸி பில்டரில் கற்றாழை சேர்த்து அதனுடன் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 2 டீஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
  • தற்போது லேசாக அதை அரைத்து எடுக்கவும்.
  • தயாரான பேஸ்ட்டை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
  • இயற்கையான கற்றாழை ஹேர் மாஸ்க் தயார்.

 

பயன்படுத்தும் முறை

 

-curd-benefits-for-hair-dandruff (1)

 

  1. ஹேர் மாஸ்க் தலையில் தடவுவதற்கு முன் கூந்தலை நன்றாக சீவி சிக்கல்களை எடுத்துக் கொள்ளவும்.
  2. பின்னர் தயார் செய்து வைத்த கற்றாழை பேஸ்ட்டை உச்சந்தலையில் நன்றாக குளிர ஊற்றி மசாஜ் செய்யவும்.
  3. பின்னர் கூந்தலின் நீளம் முடியும் வரை அனைத்து பகுதிகளும் முடிகள் மற்றும் முடியின் வேர்கள் வரை நன்றாக தயார் செய்த பேஸ்ட்டை அப்ளை செய்யவும்.
  4. தேவைப்பட்டால் சீப்பு வைத்து தலைமுடி முழுவதும் பேஸ்ட்டை தடவவும்.
  5. அப்படியே ஒரு ஒரு மணி நேரம் உலர வைக்கவும்.
  6. தொடர்ந்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசவும்.
  7. குளிக்கும்போது ரசாயனம் குறைந்த அளவு உள்ள ஷாம்பு போட்டு தலை முடியை நன்றாக அலசவும்.
  8. இப்படி வாரத்திற்கு இரண்டு முறை இந்த ஹேர் மாஸ்கை தயார் செய்து தலைமுடியில் தடவி வந்தால் உங்கள் கூந்தல் இரண்டு மடங்கு வேகமாக வளரத் தொடங்கும்.
  9. கூடுதலாக தலைமுடியில் உள்ள பொடுகு பிசுபிசுப்பு தன்மை ஆகியவற்றை போக்கி அடர் கருப்பு நிறத்தில் கூந்தலை இரண்டு மடங்கு வேகமாக வளர செய்யும்.

கற்றாழை, ஆமணக்கு எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ

 

முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, நீங்கள் கற்றாழை, ஆமணக்கு எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றை ஒன்றாக கலந்து தடவலாம். இதற்கு, 5-6 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஆமணக்கு எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ காப்ஸ்யூல் எண்ணெயைச் சேர்க்கவும். இப்போது இவை அனைத்தையும் நன்றாக கலக்கவும். அதை உங்கள் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் நன்கு தடவவும். ஒரு மணி நேரம் கழித்து, லேசான ஷாம்பூவுடன் தலைமுடியைக் கழுவவும். இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்துவது முடி வளர்ச்சிக்கு உதவும். மேலும், முடி மென்மையாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் மாறும்.

 

முடி வளர்ச்சிக்கு கற்றாழையின் நன்மைகள்

 

l89320250120193225

 

  • உங்கள் தலைமுடியில் கற்றாழை ஜெல்லை தொடர்ந்து தடவி வந்தால், அது உங்கள் தலைமுடியின் பளபளப்பை மீட்டெடுத்து வலுவாக்கும். இது மட்டுமல்லாமல், இவற்றைப் பயன்படுத்துவதால் உச்சந்தலையில் அரிப்பு, எரியும் உணர்வு போன்றவையும் நீங்கும். இது தவிர, முடி ஆரோக்கியமாக மாறும், அதன் வளர்ச்சி வேகமாக இருக்கும், மேலும் முடி இடுப்பு வரை நீளமாக மாறும். இது எண்ணெய் பசையுள்ள முடியின் பிரச்சனையையும் தீர்க்கிறது மற்றும் சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. இது முடி உதிர்வதைத் தடுக்கிறது மற்றும் முடியை சரிசெய்யவும் செயல்படுகிறது.
  • கற்றாழை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. கற்றாழையில் இதுபோன்ற பல நொதிகள் காணப்படுகின்றன, அவை உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இது முடி வேர்க்கால்களையும் பலப்படுத்துகிறது. இதனால் முடி வலுவடைந்து முடி வேகமாக வளரும். கற்றாழை ஈரப்பதமூட்டும் பண்புகளையும் கொண்டுள்ளது, இதுமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றுகிறதுஅதையும் செய்யுங்கள். வறண்ட கூந்தலில் இருந்து கற்றாழை நிவாரணம் அளிக்கும்.

முடி வளர்ச்சிக்கு தயிரின் நன்மைகள்

 

steps-to-set-thick-yoghurt-or-curd-at-home-2 (2)

 

  • தயிர் ஆழமான ஈரப்பதத்தை வழங்குகிறது. இது தோல் துளைகள் வழியாக உச்சந்தலையை ஆழமாக வளர்க்கிறது. எனவே, இது உங்கள் முடி வேர்களை ஈரப்பதமாக்குகிறது மற்றும் அதன் மசகு பண்புகள் காரணமாக அவற்றில் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்கிறது. இதன் காரணமாக முடி வேர்கள் பலவீனமடைந்து உதிர்வதில்லை. அதாவது தயிர் உங்கள் தலைமுடியை பலப்படுத்துகிறது.
  • தயிர் முடி மெலிவதைத் தடுக்கிறது. ஏனெனில் இது உங்கள் தலைமுடியின் மேல் அடுக்கில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது, இதன் காரணமாக சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்கள், வலுவான வெப்ப காற்று மற்றும் குளிர்ந்த வறண்ட காற்று ஆகியவை உங்கள் தலைமுடியை சேதப்படுத்த முடியாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து தயிரை பயன்படுத்தும்போதுதான் இந்த நன்மைகள் அனைத்தும் கிடைக்கும்.

மேலும் படிக்க: கண்ட்ரோல் இல்லாம முடி கொட்டுதா? 15 நாட்களில் மீண்டும் வளரச் செய்ய இந்த பொடியை தயாரித்து குடியுங்கள்

 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள்- HerZindagi Tamil

 

image source: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com