முகத்தை நீண்ட காலம் பளபளப்பாக வைத்திருக்க, அடிக்கடி பார்லர் சென்று விலை உயர்ந்த ஃபேஷியல் செய்து வருகிறோம். பல பெண்கள் ஒவ்வொரு மாதமும் விதவிதமான ஃபேஷியல் கிட்களை வாங்கி உபயோகிக்கிறார்கள். ஆனால் இது முகத்திற்குத் தேவையான பொலிவைத் தருவதில்லை. அதுபோன்ற நிலையில் சில இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி முகத்தை பொலிவாக வைத்திருக்கலாம். வீட்டிலேயே அன்னாசிப்பழத்தைக் கொண்டு எப்படி ஃபேஷியல் செய்யலாம் என்பதை இந்தக் கட்டுரையின் மூலம் பார்த்து தெரிந்துக்கொள்வோம்.
மேலும் படிக்க: திரிபலா முடிக்குப் பயன்படுத்துவதால் கூந்தலுக்கு ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை அளிக்கிறது
அன்னாசிப்பழம் - 1 துருவியது
தயிர் - 1 தேக்கரண்டி
தேன் - 1 டீஸ்பூன்
காபி தூள் - 1 தேக்கரண்டி
ஃபேஷியல் செய்வதற்கு முன் முகத்தை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். இதற்கு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு முகத்தை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். இதில் சிறிது அன்னாசி பழச்சாறு சேர்த்து முகம் கழுவலாம், அது உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவை. இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். அதன் பிறகு முகத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதற்கு அன்னாசிப் பழ பேஸ்டை எடுத்து, அதில் சிறிது காபி தூளை கலக்கவும். இதை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஸ்கரப் செய்ய வேண்டும்.
முக ஸ்க்ரப் செய்த பிறகு நீராவி எடுக்கவும். நீராவி எடுக்க ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு சூடாக்கவும். இதற்குப் பிறகு துண்டை கொண்டு முகத்தில் நீராவி எடுக்க வேண்டும். நீராவி எடுத்துக்கொள்வது உங்கள் சருமத்தின் துளைகளைத் திறக்க உதவும். இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும். மேலும் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் சுத்தமாகும், கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் குறைக்க உதவுகிறது.
மேலும் படிக்க: கருப்பான நிறத்திலிருந்தால் இந்த 5 பொருட்களைப் பயன்படுத்தி பளிச்சென்ற சருமத்தைப் பெறலாம்
நீராவி எடுத்த பிறகு அன்னாசி பழ பேஸ்ட் மற்றும் தேன் கொண்டு முகத்தை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். முகத்தை மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
சருமத்தை மசாஜ் செய்த பிறகு அன்னாசிப்பழத்தை முகத்தில் தடவலாம். இதற்கு முதலில் ஒரு பாத்திரத்தில் அன்னாசி, தேன் மற்றும் தயிர் கலக்கவும். பின்னர் அதை முகத்தில் தடவவும். வேண்டுமானால் சந்தையில் கிடைக்கும் அன்னாசிப் பொடியையும் பயன்படுத்தலாம். முகத்தில் 30 நிமிடங்கள் விடவும்.
சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு பருத்தி துணி அல்லது பருத்தி பஞ்சு உதவியுடன் முகத்தை சுத்தம் செய்யவும். பிறகு சாதாரண நீரில் முகத்தை சுத்தம் செய்யவும். இப்போது மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இவ்வாறு முகத்தில் ஃபேஷியல் செய்தால் சருமத்தை மேம்படுத்தலாம்.
இந்த அன்னாசி பழ ஃபேஷியல் சருமம் பளபளப்பாக இருக்கும். இதை தடவினால் முகத்தில் பொலிவு நீண்ட நாட்கள் நீடிக்கும். ஆனால் உங்களுக்கு சருமம் தொடர்பான பிரச்சனைகள் அதிகம் இருந்தால், நிபுணர்களின் ஆலோசனையின்றி முயற்சி செய்யாதீர்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com