herzindagi
image

15 நாளில் உதிர்ந்த முடிகள் மறுபிறவி எடுக்க, வழுக்கை திட்டுகளில் முடி வளர இதைச் செய்யுங்க

உங்கள் தலைமுடி நாளுக்கு நாள் அதிகமாக உதிர்கிறதா? எத்தனை முயற்சிகள் எடுத்தாலும் முடி உதிர்வை கட்டுப்படுத்த முடியவில்லையா? எப்போதுமே முடி உதிர்வுக்கு மருந்து, சிகிச்சைகள் மற்றும் அழகு சாதன பொருட்களை மட்டும் நம்பி இருக்காமல், இயற்கையான வழிகளை கையாளுங்கள். இந்த பதிவில் உள்ள சிறிய குறிப்பு 15 நாட்களில் உதிர்ந்த முடிகள் மறுபிறவி எடுக்கவும் வழுக்கை திட்டுகளில் மீண்டும் முடி வளரவும் உதவி செய்யும்.
Updated:- 2025-07-12, 23:43 IST

தற்போதைய காலத்தில் எல்லாருக்கும் முடி கொட்டுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. அதுவும் ஆணாக இருக்கட்டும் பெண்ணாக இருக்கட்டும் இருவருக்கும் முடி உதிர்வு பிரச்சனை தீர்க்கப்படாததாகத்தான் உள்ளது. ஒரு சிலருக்கு முடி உதிர்வு அதிகமாக ஏற்பட்டு வழுக்கை அல்லது வழுக்கை திட்டுகள் ஏற்பட்டு விடுகிறது. இது போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் இந்த பதிவில் உள்ள இயற்கை குறிப்பை பின்பற்றுங்கள். முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் மறுபிறவி எடுத்தது போல் அடர்த்தியாக சில நாட்களில் வளர தொடங்கும். வழுக்கை திட்டுகளில் முடி வளர என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

 

மேலும் படிக்க: பொடுகு, பேன், தலைமுடி உதிர்வுக்கு, உங்களுக்கான 6 சொந்த ஷாம்பூகளை வீட்டில் தயாரித்துக் கொள்ளுங்கள்

 

15 நாளில் உதிர்ந்த முடிகள் மறுபிறவி எடுக்க சிறப்பு செய்முறை

 

Untitled-design---2025-04-19T155624.568-1745058391491-1749727628606-1752234740267-1752235025285

 

தேவையான பொருட்கள்

 

  • இரண்டு சின்ன வெங்காயம்
  • ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணெய்
  • இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
  • ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய்

 

செய்முறை

 

  1. இரண்டு சின்ன வெங்காயத்தை தோலை உரித்து நன்றாக கழுவி வெங்காயத்தை நசுக்கி எடுத்துக் கொள்ளவும்.
  2. நசுக்கி வைத்த வெங்காயத்தின் மீது ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணையை கலக்கவும்.
  3. இதை இரவு முழுவதும் ஊற வைத்து விடுங்கள்.
  4. பின்னர் காலை எழுந்ததும் அதில் இரண்டு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
  5. அதோடு ஒரு டீஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்க்கவும்.
  6. இவை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.
  7. பின்னர் ஒரு பாத்திரத்தில் மூன்று கிளாஸ் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
  8. இரவு முழுவதும் ஊறவைத்து பின்னர் அதில் தேங்காய் எண்ணெய் கடுகு எண்ணெய் சேர்த்த கலவையை சிறிய பாத்திரத்தில் எடுத்து, கொதிக்கும் தண்ணீரில் மிதக்க வைக்கவும்.
  9. எண்ணெய் சூடான பின்பு அதை தனியாக எடுக்கவும்.
  10. முடி உதிர்வை தடுக்கும் இயற்கை எண்ணெய் தயார்.

 

பயன்படுத்தும் முறை

 

  • நீங்கள் தயார் செய்த எண்ணையை லேசான சூட்டில் உங்கள் கூந்தல் முழுவதும் நன்றாக தடவவும்.
  • குறிப்பாக வேரில் படும் அளவிற்கு உச்சந்தலையில் நன்றாக தேய்க்கவும்.
  • ஒரு அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும்.

 

குளிக்கும் முறை

 

  • கொதிக்க வைத்த ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
  • அதனுடன் ஒரு டீஸ்பூன் டீத்தூள் ஒரு டீஸ்பூன் காபித்தூளை சேர்க்கவும்.
  • பின்னர் நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் ஷாம்புவை அந்த தண்ணீரில் நன்றாக கலக்கவும்.
  • இப்போது நீங்கள் தயாரித்து வைத்த டீ காபித்தூள் ஷாம்பு கலவையை கூந்தலில் நன்றாக அப்ளை செய்து குளிக்கவும்.

கூந்தல் வளர்ச்சிக்கு சின்ன வெங்காயம் நன்மைகள்

 242921-onion-juice

 

வெங்காயச் சாற்றைப் பயன்படுத்துவது முடி பராமரிப்புக்கான ஒரு பழமையான மற்றும் பயனுள்ள முறையாகும். இதன் பயன்பாடு முடி உதிர்தலைக் குறைத்து முடியின் தரத்தை மேம்படுத்தும். வெங்காயத்தில் சல்பர் உள்ளது, இது முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. சல்பர் முடி வேர்களுக்கு ஊட்டமளித்து புதிய முடி வளரும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இது பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது பொடுகு மற்றும் உச்சந்தலையில் தொற்றுகளைப் போக்க உதவும். வெங்காயச் சாறு முடி உதிர்தலைக் குறைக்கும். இதில் முடி வேர்களை வலுப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன. மேலும், வெங்காயச் சாற்றை உச்சந்தலையில் தடவுவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, இது முடி வேர்களுக்கு அதிக ஊட்டச்சத்தை வழங்குகிறது. இதன் சாறு இயற்கையான கண்டிஷனிங் பண்புகளைக் கொண்டுள்ளது, இது முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும்.

வெங்காய சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்

 

  • சின்ன வெங்காயம் இரண்டு
  • 2-3 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்

 

செய்முறை

 

  1. வெங்காயத்தை உரித்து சிறிய துண்டுகளாக வெட்டவும்.
  2. அவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சாற்றைப் பிழியவும்.
  3. வெங்காயச் சாறுடன் தேங்காய் எண்ணெயைக் கலக்கவும்.
  4. இந்தக் கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும்.
  5. 30-45 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் ஷாம்பூவால் கழுவவும்.
  6. நன்மைகள்: தேங்காய் எண்ணெய் முடியை ஈரப்பதமாக்குகிறது மற்றும் வெங்காய சாற்றின் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் முடியை வலுப்படுத்துகின்றன.

 

வெங்காய சாறு மற்றும் தேன்

 

  • சின்ன வெங்காயம் ஒன்று
  • 1 டீஸ்பூன் தேன்

 

செய்முறை

 

  1. வெங்காயத்தை தோல் நீக்கி அரைத்து சாறு எடுக்கவும்.
  2. வெங்காயச் சாற்றில் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  3. இந்தக் கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  4. பின்னர் உங்கள் தலைமுடியை லேசான ஷாம்பூவால் கழுவவும்.
  5. நன்மைகள்: தேன் உச்சந்தலையை ஈரப்பதமாக்குகிறது மற்றும் வெங்காய சாறுடன் இணைந்து முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.


வெங்காய சாறு மற்றும் தயிர்

 

  • சின்ன வெங்காயம் ஒன்று
  • 2-3 டீஸ்பூன் தயிர்

 

செய்முறை

 

  1. வெங்காயத்தை தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும்.
  2. வெங்காயச் சாற்றைப் பிழிந்து அதனுடன் தயிர் சேர்க்கவும்.
  3. இந்தக் கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும்.
  4. பின்னர் ஷாம்பூவுடன் கழுவவும்.
  5. நன்மைகள்: தயிர் உச்சந்தலையை குளிர்விக்கிறது மற்றும் வெங்காய சாறு முடியை வளர்க்கிறது.

மேலும் படிக்க: முகத்தை பொலிவு படுத்த, கொதிக்க வைத்த செம்பருத்திப்பூ, வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஜெல்

 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற அழகு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். 

 

image source: freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com